ஆசை வைத்தேன் ரத்தினமே!
அரூர் சந்தையில் தனது காதலியை அவன் கண்டு கொண்டான். வேலை
முடிந்ததும் அவள் ஊருக்குப் புறப்பட்டாள். அவனும் பின் தொடர்ந்தான். வழியில் யாரும்
இல்லை. அவன், அவள் மீது கொண்டுள்ள அன்பைப் புலப்படுத்திப் பாடுகிறான்,
|
அரூருப் பேட்டையிலே
அழகான சந்தையிலே
ஆலமரத்தடியில்-சின்னத்தங்கம்-நீ
ஆய்ந்தெடுத்த ரத்தினமோ
?
சொன்னாலும் ஆகாது
சொல்லவும் கூடாது
கண்டாலே போதுமடி-சின்னத்தங்கம் என்
கருமமெல்லாம் தொலைஞ்சி போகும்
கட்டாணி முத்தோ-நீ?
கற்கண்டோ சர்க்கரையோ
?
தொட்டாலே போதுமடி-சின்னத்தங்கம் என்
தொந்திரவு நீங்குமடி
ஆசைக் குகந்தவளே
ஆசார மானவளே
நேசித்தால் எந்தனுக்கு-சின்னத்தங்கம்
நினைவு தடுமாறுதடி
பதினாறு பக்கத்துக்கும்
மதிவு நிலா உன் முகமோ
?
அதனாலே உந்தன் மேலே-சின்னத்தங்கம்
ஆசை வச்சேன் ரத்தினமே
! |
சேகரித்தவர்:
S.
சடையப்பன் |
இடம்:
அரூர் வட்டம்,
தருமபுரி மாவட்டம். |
|