பின்னாளில் தந்தை பெரியார் காமராசரை ஆதரிப்பதாகச்
சொல்லிக்கொண்டு காங்கிரஸ் இயக்கத்தில் இருக்கும் மொழி, இன
உணர்வுகள் அற்றவர்களையும் ஊழல் பேர்வழிகளையும் ஆதரிப்பதைப் பாரதிதாசன் விரும்பவில்லை. எனவே தந்தை பெரியாரின்
அணுகுமுறையைக் கண்டித்துக் ‘ கூலித் தொண்டு கூடாது ’ ( குயில்,
கி.இ.10.1.61) என்ற தலையஙகக் கட்டுரையை எழுதினார்.
பாரதிதாசன் திராவிடர் கழகச் சார்பாளராக இருந்தாரே தவிர அவ்வியக்கத்தில் உறுப்பினராக இல்லை. எனவே அவர் நினைத்ததை எழுத முடிந்தது .
3. பாரதிதாசன் தொடக்கத்தில் பொதுவுடைமைக் கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்டவராக விளங்கினார் . பிற்காலத்தில் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் , நடைமுறைச் செயல்பாடுகளைக் கண்டு கசப்புற்றார் . குறிப்பாகப் புதுவை மாநிலப் பொதுவுடைமை இயக்கத்தின் மீதும் , அவ்வியக்கத்தின் தலைவர் திரு. சுப்பையா மீதும் வெறுப்புற்றார்.
‘கம்முய்னிசிட்டுகளை விட்டு வைக்கக்
கூடாது’ (குயில், கி.இ. 26-1-60) |
‘சுப்பையாவை விட்டு வைப்பது
தப்பையா’ (குயில், கி.இ. 2-2-60) |
‘நடவடிக்கை எடுக்க வேண்டாமா?’
(குயில், கி.இ. 16-2-60) |
‘சப்பான் வழி தப்பானது’
(குயில், கி.இ. 28-6-60) |
முதலிய தலையங்கக் கட்டுரைகள் அவருடைய பொதுவுடைமைக் கோட்பாட்டின் நிலையினை உணர்த்துகின்றன.
4. திராவிட கழகத்தின் தூண்களில் ஒருவரும் ‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியருமான ‘ குத்தூசி ’ குருசாமி பாரதிதாசனின் பேனாமுனைத்
|