இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1173
Zoom In NormalZoom Out


வாயிற்று.  இனி, ‘ஆவும் ஆயனும் செல்க’ என்றவிடத்துச் ‘செல்க’
என்னும்   வியங்கோள்வினை  இருதிணைக்கும்  முடிபு  ஏற்றமையின்
திணைவழுவமைதியாம். * 

மற்று,  இன்ன  எண்  என்பது   சூத்திரத்துப்   பெற்றிலாமையின்
‘உய்த்துணரவைத்தல்’  என்னும்  உத்திவகையான்,  உம்மையெண்ணும்
எனவென்னெண்ணும்   எனக்கொள்க;  என்னை,  இவ்விரண்டென்னும்
தொகை  பெற்றும்  பெறாதும் முடியும்; மற்றை யெண்ணுக்க ளெல்லாம்
தொகை  பெற்றே  முடியும்.  ஈண்டுத்  தொகை  பெறும் எண்ணினாற்
கூறிற்றிலர், திணைவழூஉம் ஆகலான் என்பது. (45)

46. வேறுவினைப் பொதுச்சொ - லொருவினை கிளவார். 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோ வெனின், இதுவும் மரபு வழுக்காத்தல்
நுதலிற்று.

உரை:  வேறு வேறு வினையையுடையவாய் நின்ற சொற்களை ஒரு
வினையாற்  சொல்லற்க  என்பது;  எனவே, பொது வினையாற் கிளக்க
என்பதாம்.

இனி, ஒருவும் வினை என்பது  ஒரூஉவினை என்றாயிற்று என்றலும்
ஒன்று ; ஒரூஉதல் என்பது நீங்குதல்.

அவை:  அடிசில், அணிகலம்,  இயமரம்  என்பன  ;  இயம்பினார்
என்னுந் தொடக்கத்தன கொள்க.

* அமைதியாமாயிற்றுமென்க -- பிரதிபேதம்.

ஒரூஉவினை -- என்றும் பாடம்.  மற்று,

‘ஊன்றுவை கறிசோ றுண்டு வருந்தும்’ (புறநா. - 14.)

என வந்ததால் எனின், அது பாட மறிந்து திருத்திக் கொள்க. (46)

47. எண்ணுங் காலு மதுவதன் மரபே.

இச்   சூத்திரம்  என்னுதலிற்றோ வெனின், இதுவும் மரபு வழுக்காத்தல்
நுதலிற்று. 

உரை: வேறு வேறு வினையையுடைய சொற்களை யெண்ணுங்காலும்
பொது வினையாற் சொல்லுப என்றவாறு. 

வரலாறு: ‘யாழுங் குழலும் பறையும் இயம்பினார்’ என வரும். (47)

48.  இரட்டைக் கிளவி யிரட்டுப்பிரிந் திசையா.

இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின்,