இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1174
Zoom In NormalZoom Out


இதுவும் மரபு வழுக்காத்தல் நுதலிற்று. 

உரை: இரட்டித்துச் சொல்லும் சொற்கள் அவ்விரட்டுதலிற் பிரித்துச்
சொல்லப்படா என்றவாறு. 

வரலாறு: சுருசுருத்தது, சுறுசுறுத்தது,  கறுகறுத்தது  என, இசையுங்
குறிப்பும் பண்பும் பற்றி வரும். 

49. ஒருபெயர்ப் பொதுச்சொ லுள்பொரு ளொழியத்
தெரிபுவேறு கிளத்த றலைமையும் பன்மையும்
உயர்திணை மருங்கினு மஃறிணை மருங்கினும்.
 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோ வெனின், இதுவும் மரபு வழுக்காத்தல்
நுதலிற்று. 

உரை: ஒரு பெயர்ப்பட நின்ற பொதுச் சொற்களைச் சொல்லுங்கால்
ஆண்டுள்ள பொருள் எல்லாம் 

எடுத்துச் சொல்லாது,   தெரிபு    வேறுகிளந்து   தலைமையானும்
பன்மையானும் கூறுக, இரு திணைக்கண்ணும் என்றவாறு. 

வரலாறு:  சேரி என்பது பலர் இருப்பதுமன் : ஆயினும், ஆண்டுச்
சில  பார்ப்பனக் குடி உளவேல், அதனைப் பார்ப்பனச் சேரி என்பது ;
இஃது உயர்திணைக்கண் தலைமைபற்றி வந்தது. 

அத் திணைக்கண் பன்மைபற்றி வருமாறு : 

எயின நாடு, குற்றிளை நாடு என வரும். 

இனி,  அஃறிணைக்கண்  தலைமைபற்றி வருமாறு: கமுகந்தோட்டம்
என  வரும்;  மற்றைய பொருள் பயின்று, கமுகு ஒன்றிரண்டு உண்மை
நோக்கிச் சொன்னாரேல் தலைமையாம். இனிக் கமுகு ஆண்டு நெருங்கி
மற்றைய சிலவாதல் கண்டு சொன்னாரேல் அதுவே பன்மையாற் பெற்ற
பெயருமாம் : 

ஒடுவங் காடு, காரைக் காடு என்பன பன்மையாற் பெற்ற பெயர்.
                                                      (49)

50. பெயரினுந் தொழிலினும் பிரிபவை யெல்லா
மயங்கல் கூடா வழக்குவழிப் பட்டன.
 

இச்  சூத்திரம்  என்னுதலிற்றோ வெனின், இதுவும் மரபு வழுக்காத்தல்
நுதலிற்று. 

உரை:    மேனின்ற    அதிகாரத்தால்     உயர்திணைக்கண்ணும்
அஃறிணைக்கண்ணும் பெரியனானும் தொழிலினானும் பிரிந்து வருமவை
யெல்லாம் மயங்குதற்குச் செல்ல; வழக்கு வழிபட்டன ஆகலான்