ளிர்த்தது, மாபூத்தது, மாகாய்த்தது எனவரும். இவ்வினை மர மாவிற் கல்லது ஏலாது. பிறவும் அன்ன.
‘மாவும் மருதும் ஓங்கின’ என்பது, இனத்தான் மாமரம் என விளங்கும்.
‘மாவும் மரையும் புலபடர்ந்தன’ என்றால், விலங்கு மா என்பது அறியப்படும்.
இனிச் சார்பினான் அறியவருமாறு : விற்பற்றி நின்று, ‘கோல் தா’ என்றால், கணைக்கோலின்மேல் நிற்கும், அதற்குச் சார்பு அதுவாகலான். குதிரைமேலிருந்து, ‘கோல் தா’ என்றால், மத்திகைக் கோலாம் ஆகலானும், சுள்ளற்கோலாம் ஆகலானும் செல்லும்; அதற்குச் சார்பு அதுவாகலான். பிறவும் அன்ன. (53)
54. ஒன்றுவினை மருங்கி னொன்றித் தோன்றும்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், அம் மூன்று வகையான் உணர்ந்தவாறு
போலாது, உணராமை நிற்குமாறுடைத்து இச்சொல் என்பது உணர்த்துதல் நுதலிற்று.
உரை:
ஒன்று வினை என்பது -- பொது வினை ; பொது வினையாயிற் பகுதியுணராமற் றோன்றும் என்றவாறு.
அது வருமாறு: ‘மா வீழ்ந்தது’ என்றவிடத்து, இன்ன மா என்பது உணர்த்தல் ஆகாது : பொதுவாய் நிற்கும். ()
55.
வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல்
நினையுங் காலைக் கிளந்தாங் கியலும்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், வினை வேறுபடாஅப் பல்பொருள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
உரை:
வினை வேறுபடாஅப் பல பொருள் ஒரு சொல்லை ஆராயுமிடத்து இன்னதென்று அறியக் கிளந்தே சொல்லுக என்றவாறு.
வரலாறு: ‘ஆன் கன்று நீருட்டுக’ என வரும்.
நினைதல் என்பது ஆராய்தல்.
ஆராயுமிடத்துக் கிளந்து கூறுக எனவே, ஆராய்ச்சி யில்லாத இடத்தாயிற் கிளவாதே கூற அமையும் என்பதே அமையும். ஆராய்ச்சியுடைய நிலம் என்பது எருநிலம் ; யாதோ வெனின், ‘கன்று நீருட்டுக’ என்றவிடத்து, ஆன் கன்றும், எருமைக் கன்றும், பூங்கன்றும் எனப் பலவும் ஆங்கு உளவாயின், அவன் சொன்ன கன்று நிற்பப், பிறிதொரு கன்று நீரூட்டல் வழுவாம். அதனான், இன்னுழி இன்னகன்று என்று கிளந்து சொல்லுக ; அல்லாக்கால், இன்ன கன்று என்று கிள
|