நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   511
Zoom In NormalZoom Out


கொள்ளாது  இரண்டும்  பிறிது வினை கோடற்கு ஒருங்கு நிகழுங்காலம்
தோன்றுமாயின்,   சுட்டுப்பெயர்க்  கிளவி முற்படக்கிளவார்-உலகத்தார்
சுட்டுப்  பெயராகிய  சொல்லை  முற்படக் கிளவார், இயற்பெயர் வழிய
என்மனார்  புலவர்  -  இயற்பெயர்க்குப்  பின்னாகக்  கூறுவர்  என்று
சொல்லுவர் புலவர், எ-று. 

‘ஒருங்கியலும்’ என்றதனான், ஒரு பொருளை உணர்த்துதல் கொள்க.
‘வழிய’  என்றதனான், இயற்பெயர்வழி நிற்றற்குரிய அகர இகரச் சுட்டே
கொள்க. 

சாத்தன்   வந்தான்,   அவற்குச்  சோறு கொடுக்க; சாத்தி வந்தாள்,
அவட்குப் பூக்கொடுக்க என வரும். 

‘அவன் வந்தான்’,  சாத்தற்குச்  சோறு  கொடுக்க’ எனின், அவனும்
சாத்தனும் வேறுவேறாய், அவன் வருந்துணையுஞ் சாத்தன் சோறு பெறா
திருந்தானாவான் செல்லும்; அங்ஙனங் கூறற்க. 

இனி, ‘இயற்பெயர்   வழிய’  என்ற  மிகையான்,இயற்பெயர் அல்லா
உயர் திணைப் பெயர்க்கும் அஃறிணைப் பெயர்க்கும் சுட்டுப்பெயர் பின்
வருதல் கொள்க. 

நம்பி  வந்தான்,  அவற்குச்  சோறு  கொடுக்க;  நங்கை  வந்தாள்,
அவட்குப்  பூக்கொடுக்க;  எருது  வந்தது, அதற்குப் புல் இடுக; குதிரை
வந்தது, அதற்கு முதிரை கொடுக்க என வரும். 

‘தன்னினம்  முடித்தல்’ என்பதனான், விரவுப் பெயருள் இயற்பெயர்
ஒழிந்தனவுங் கொள்க.  

முடவன்  வந்தான்,  அவற்குச்  சோறு கொடுக்க; முடத்தி வந்தாள்,
அவட்குக் கூறை கொடுக்க என வரும். 

‘வினைக்கு  ஒருங்கியலும்’  என்று  வினை  கூறுதலாற்  பெயர்க்கு
ஒருங்கு இயலாது முன்கூறினும் அமைக என்பதாம். 

(எ-டு.) சாத்தன் அவன்; அவன் சாத்தன் என வரும். (38) 

எய்தியது விலக்கல்

39. முற்படக் கிளத்ததல் செய்யுளுள் உரித்தே. 

இஃது எய்தியது விலக்கிற்று. 

(இ-ள்.) முற்படக்   கிளத்தல்  -  இயற்பெயருஞ்   சுட்டுப்பெயரும்
வினைக்கு ஒருங்கியலும் வழிச் சுட்டுப்