நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   512
Zoom In NormalZoom Out


பெயரை முற்கூறுதல், செய்யுளுள் உரித்து-செய்யுளிடத்து உரித்து, எ-று.

(எ-டு.) 

‘அவனணங்கு நோய்செய்தான் ஆயிழாய்! வேலன்
விறன்மிகுதார்ச் சேந்தன்பேர் வாழ்த்தி-முகனமர்ந்
தன்னை அலர்கடப்பந் தாரணியின் என்னைகொல்
பின்னை யதன்கண் விளைவு.’
           (நன்.சூ.394உரை) 

சேந்தன், இயற்பெயர். (39) 

சுட்டு முதலாகிய காரணக்கிளவி

40. சுட்டுமுத லாகிய காரணக் கிளவியும்
சுட்டுப்பெய ரியற்கையின் செறியத் தோன்றும்.
 

இதுவும் அச்சுட்டு ஆராய்ச்சியே கூறுகின்றது. 

(இ-ள்.)  சுட்டு   முதலாகிய  காரணக்  கிளவியும்  - சுட்டுப்பெயர்
முதலாகிய    காரணப்   பொருண்மையை   உணர்த்தும்   சொல்லும்,
(உம்மையான்  காரணமின்றி,  வருஞ்  சுட்டுப்பெயரும்),   சுட்டுப்பெயர்
இயற்கையின்  செறியத்  தோன்றும் -  சுட்டுப்பெயர் போலத் தன்னாற்
சுட்டப்படும்  தொழிலை  உணர்த்துஞ்  சொற்குப்  பின் கிளக்கப்படும்,
எ-று. 

‘சுட்டுப்பெயர்  இயற்கை’ எனவே, வழக்கிற்குப் பின்னுஞ் செய்யுட்கு
முன்னும் நிற்குமென்பது பெற்றாம். 

‘சாத்தன்  கை  எழுதுமாறு  வல்லன்’, அதனான் தந்தை உவக்கும்;
சாத்தி   சாந்து   அரைக்குமாறு   வல்லள்,  அதனாற்  கொண்டவன்
உவக்கும் - இவற்றுள்   சுட்டு  முதலாகிய  காரணக்கிளவி  உருபன்று;
உருபேற்ற  சுட்டுப்  பெயரோட  ஒப்பதோர்  இடைச்சொல்; என்னை?
பிளவுபடாது ஒன்று பட்டு இசைத்தலின். 

‘சாத்தன்   வந்தான்,  அஃது  அரசற்குத்  துப்பு ஆயிற்று; கிழவன்
பிரிந்தான்,  அதனைக்  கிழத்தி உணர்ந்திலள்-என இவை காரணமின்றி
வந்தன. (40) 

இயற்பெயரும் சிறப்புப்பெயரும் அமையுமாறு

41. சிறப்பி னாகிய பெயர் நிலைக் கிளவிக்கும்
இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்.
  

இதுவும் ஒரு பொருளை உணர்த்தும் இருபெயர் வழுக்காக்