றவாறு): இவை வினைமுதல் ஒடு உருபான் வந்தன.
முயற்சியின் பிறத்தலான் ஒலி நிலையாது: இதனுள் ‘முயற்சியின்’ என்பது காரக ஏது; ‘பிறத்தலான் ஒலி நிலையாது’ என்பது ஞாபக ஏது. ஐந்தாவதற்கு உரிய ஏதுவும் ஈண்டு ஓதினது, ஏதுவை வரையறுத்தற்கு.
‘அன்ன பிறவும்’ என்றதனான், கண்ணாற்கொத்தை: இது சினை வினைமுதற்கு ஏறியது.
‘உறழ்மணியன் உயர்மருப்பின’ (புறம். 22:2)
‘பெண்டகையாற் பேரமர்க் கட்டு’ : (குறள். 1083)- இவை, ஆன் ஒடுவாயின. ‘மனத்தொடு வாய்மை மொழியின்’ (குறள். 295): ஒடு, ஆன் ஆயிற்று. மதியொடு ஒக்கும் முகம்: இஃது ஒப்பு. சூலொடு கழுதை பாரம் சுமந்தது: இது கட்புலனாகா ஒரு வினை ஒடு. இவை முதலியன கொள்க. இவற்றின் வேறுபாடு உய்த்துணர்க.
(13)
நான்காம் வேற்றுமையின் பொருள்
76.
நான்கா குவதே.
கு-வெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எப்பொரு ளாயினுங் கொள்ளும் அதுவே.
இது, முறையானே நான்காவது இப்பொருட்கண் வரும் என்கின்றது.
(இ-ள்.) கு-எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி நான்காகுவதே-மேல் கு எனப் பெயர் கொடுத்து ஓதப்பட்ட வேற்றுமைச் சொல் நான்காவதாம்;
அது எப்பொருளாயினும் கொள்ளும் - அஃது யாதானுமொரு பொருளாயினும் அதனைத் தான் ஏற்று நிற்கும், எ-று.
(எ-டு.) அந்தணற்கு ஆவைக் கொடுத்தான் என வரும்.
மாணாக்கற்கு நூற்பொருள் உரைத்தான்
|