நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   563
Zoom In NormalZoom Out


ஒற்றியது   பொருள். தெரிந்து மொழிச்செய்தி: தெரிந்து மொழியான்
செய்யப்படுதலின்  தெரிந்து மொழிச் செய்தி ஆயிற்று. கபிலரது பாட்டு.
இது  ‘பாரியது  பாட்டு’  எனவும் நிற்றலின் இரு பொருட்கு உரியதாம்.
பரணரது  பாட்டியல்.  இதுவும்  அது. இவை பொருட்பிறிதின் கிழமை.
வெள்ளியது  ஆட்சி.  இது காலப்பிறிதின் கிழமை. வாழ்ச்சி - காட்டது
யானை:  இது  பொருட்பிறிதின்  கிழமை,  யானையது  காடு  -  இது
நிலப்பிறிதின்    கிழமை.    வாழ்ச்சி   வாழ்தலை   உணர்த்துங்கால்
தற்கிழமையுமாம். 

‘அன்ன  பிறவும்’ என்றது, எட்சாந்து, கோட்டு நூறு; இவை முழுதுந்
திரிந்தன.   சாத்தனது   ஒப்பு,  தொகையது  விரி,  பொருளது  கேடு,
சொல்லது பொருள். இவை சிறிது திரிந்தன. (19) 

ஏழாம் வேற்றுமையின் பொருள்

82. ஏழா குவதே;
கண்ணெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின்
அனைவகைக் குறிப்பின் தோன்றும் அதுவே.
 

(இ-ள்.) கண் எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி ஏழாகுவதே-மேல்
கண்   என்று   பெயர்   கொடுத்து  ஓதப்பட்ட  வேற்றுமைச்  சொல்
ஏழாவதாம்; அது வினை செய்  இடத்தின் நிலத்தின் காலத்தின் அனை
வகைக்   குறிப்பின்   தோன்றும்-அது   வினை   செய்யாநிற்றலாகிய
இடத்தின்கண்ணும்,   வினை   நிகழாது   வரையறை   உடையதொரு
நிலமாகிய   இடத்தின்கண்ணும்,   வினை  நிகழாது  வரையறைப்பட்டு
நிற்கும் காலமாகிய இடத்தின்கண்ணும்