ளவிக் கதுவென் வேற்றுமை
முதற்கண் வரினே சினைக்கை வருமே.
இஃது, உருபுகள் மயக்கமாய் வருவனவற்றைக் கூறுமாறு கூறுகின்றது.
(இ-ள்.) முதல் சினைக் கிளவிக்கு-முதற்சொல்லொடு தொடர்ந்த சினைச்சொல்லிற்கு, அது என் வேற்றுமை முதற்கண் வரின் - ஆறாம் வேற்றுமை முதற்கண்ணே வருமாயின், சினைக்கு ஐ வரும் - சினைச் சொல்லின்கண் இரண்டாம் வேற்றுமை வரும், எ-று.
(எ-டு.) யானையது கோட்டைக் குறைத்தான், என வரும்.
இஃது ஒரு தொடர்க்கண் இரண்டுருபு வருதலின் மயக்கமாயிற்று.
(4)
இதுவும் அது
88.
முதல்முன் ஐவரின் கண்ணென் வேற்றுமை
சினைமுன் வருதல் தெள்ளி தென்ப
இதுவும் அது.
(இ-ள்.)
முதல் முன் ஐ வரின்-அம்முதற்சினைக் கிளவிக்கண் முதற் சொல் முன் இரண்டாம் வேற்றுமை வரின், சினைமுன் கண் என் வேற்றுமை வருதல் தெள்ளிது என்ப - சினைச்சொல் முன் கண்-என் வேற்றுமை வருதல் தெள்ளிதென்று கூறுவர் ஆசிரியர், எ-று.
(எ-டு.) யானையைக் கோட்டின்கண் குறைத்தான்.
‘தெள்ளிது’ என்றதனான், யானையைக் கோட்டைக் குறைத்தான், என ஐகாரம் வருதலும், முன்னர்க் கூறிய எல்லாம் பண்பும் தொழிலும் பொருள் தொடர்ச்சியும் பற்றி வருதலுங் கொள்க.
மணியது நிறத்தைக் கெடுத்தான், மணியை நிறத்தின்கண் கெடுத்தான், மணியை நிறத்தைக் கெடுத்தான்-என முற்கூறியதும் இவையும், ஒரு தொடரின் இரண்டு உருபும் மயங்கலின், உருபு மயக்கம்.
தலைமகனது செலவை
|