்டு எழுந்த பெயர்ச் சொற் கிளவியும் - முறைப்பொருண்மையைக் கொண்டு நின்ற பெயர்ச் சொல்லினது ஆறாம் வேற்றுமைப் பொருண்மையும், பால்வரை கிளவியும் பண்பின் ஆக்கமும்-நிலத்தை வரைந்து கூறும் பொருண்மையும், பண்பின் கண் ஆம் பொருவுமாகிய ஐந்தாவதன் பொருண்மையும், காலத்தின் அறியும் வேற்றுமைக் கிளவியும் - காலத்தின்கண் அறியப்படும் ஏழாம் வேற்றுமைப் பொருண்மையும், பற்று விடு கிளவியும் தீர்ந்து மொழிக் கிளவியும் - பற்றுவிடும் பொருண்மையும் தீர்ந்து மொழிப் பொருண்மையும் ஆகிய ஐந்தாவதன் பொருண்மையும், அன்ன பிறவும் நான்கன் உருபின் தோன்றலாறு தொன்னெறி மரபின-அவை போல்வன பிறவும் நான்கன் உருபிடத்துக் கூறுதலைப் பழைய நெறி முறைமையாக உடைய, எ-று.
|
(எ-டு.) யானைக்குக் கோடு கூரிது - இஃது ஆறாவது. இவட்குக் கொள்ளும் இவ்வணி - இஃது இரண்டாவது. அவற்குச் செய்யத்தகுமக் காரியம்-இது மூன்றாவது. ஆவிற்குக் கன்று-இஃது ஆறாவது. கருவூர்க்குக் கிழக்கு-இஃது ஐந்தாவது. சாத்தற்கு நெடியன்-இதுவும் அது. காலைக்கு வரும்-இஃது ஏழாவது. மனைவாழ்க்கைக்குப் பற்று விட்டான்-இஃது ஐந்தாவது. ஊர்க்குத் தீர்ந்தான் - இதுவும் அது. ‘அன்ன பிறவும்’ என்றதனான், ஊர்க்கட்சென்றான், ஊர்க்கண் உற்றது செய்வான், ஊரிற்சேயன் என்பனவற்றிற்கு நான்கனுருபு கொள்க. இது தொகாது நின்றவிடத்து நான்கனுருபு சென்று மயங்குதலின், வேறு கூறினார். (27)
|