நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   594
Zoom In NormalZoom Out


ணயிடத்து  மெய்ப்பொருளைக்  கருதின   விளி   கொள்ளும்   உயிர்
ஈற்றுப்பெயர், இ உ ஐ ஓ என்னும் இறுதி அப்பால் நான்கே - இ உ ஐ
ஓ என்னும் இறுதியை உடைய அக்கூற்று நான்கு பெயரும், எ-று. 

‘மெய்ப்பொருள்’  என்றதனான், அஃறிணைப்பெயர் அன்மொழியாய்
உயர்திணைக்கண்  வந்துழி  உயர்திணைப்  பெயராய்  விளி ஏற்றலும்,
அவ்வீற்று  அஃறிணைப்பெயர்களும்  உயர்திணைப்  பெயர்கள் போல
விளி ஏற்றலுங் கொள்க. 

(எ-டு.) ‘சுடர்த்தொடீஇ! கேளாய்.’(கலி. 51:1) எனவும், ‘தும்பீ!’ (குறுந்.
2)  எனவும்,  ‘சிறு மீன் கவுட்கொண்ட செந்தூவி நாராய்!’ (ஐந்.எழு.68)
எனவும்  ‘கொன்றாய்!  குருந்தே!  கொடிமுல்லாய்!  வாடினீர்,  நின்றீர்
அறிந்தேன்  நெடுங்கணாள்  -  சென்றாளுக்கு’ (திணைமாலை நூற். 81)
எனவும் வரும். (3) 

இகர ஐகார ஈறுகள்

123. அவற்றுள்,
இஈ ஆகும் ஐஆய் ஆகும்.
 

இஃது, இகர ஈறும் ஐகார ஈறும் விளி ஏற்குமாறு கூறுகின்றது. 

(இ-ள்.) அவற்றுள்-முற்கூறிய நான்கு ஈற்றுப் பெயருள், இ ஈ ஆகும்
-  இகர  ஈற்றுப்  பெயர்  ஈகாரமாயும்,  ஐ  ஆய்  ஆகும்  -  ஐகார
ஈற்றுப்பெயர் ஆய் ஆயும் ஈறு திரிந்து விளி ஏற்கும், எ-று. 

(எ-டு.)  நம்பி - நம்பீ! நங்கை-நங்காய்! என வரும் (4) 

ஓகார உகர ஈறுகள்

124. ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும். 

இஃது, ஒழிந்தன விளி ஏற்குமாறு கூறுகின்றது. 

(இ-ள்.)  ஓவும்  உவ்வும் ஏயொடு சிவணும்-ஓகார ஈற்றுப் பெயரும்
உகர   ஈற்றுப்   பெயரும்  ஏகாரத்தொடு  பொருந்திப்  பிறிது  வந்து
அடைதலாய் விளி ஏற்கும், எ-று. 

(எ-டு.) கோ-கோவே! வேந்து- வேந்தே! என வரும். (5) 

125. உகரந் தானே குற்றிய லுகரம். 

இஃது, ஐயம் அறுக்கின்றது. 

(இ-ள்.) உகரந்தானே  குற்றியலுகரம்-மேற்கூறப்பட்ட   உகரமாவது
குற்றியலுகரம், எ-று. 

‘திரு-திருவே!’ (சீவக. 2121) எனச் சிறுபான்மை முற்றியலுக