ஏற்குமாறு கூறுகின்றது.
(இ-ள்.) ஆன் என் இறுதி இயற்கை ஆகும்-‘ஆன்’ என்னும் னகர ஈற்றுப்பெயர் இயல்பாய் விளி ஏற்கும், எ-று.
‘சேரமான்! மலையமான்! எனக் கூவுதற்கண்ணும் அவ்வாறே நிற்றல் காண்க. (15)
அவ்வீற்று வினையாலணையும் பெயர்
135.
தொழிலிற் கூறும் ஆனென் இறுதி
ஆய்ஆ கும்மே விளிவயி னான.
இஃது, எய்தியது, விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
(இ-ள்.) தொழிலிற்கூறும் ஆன் என் இறுதி விளிவயினான-தொழிலினான் ஒரு பொருள் அறியச் சொல்லும் ‘ஆன்’ ஈற்றுப் பெயர் விளி ஏற்குமிடத்து, ஆய் ஆகும்-‘ஆய்’ ஆம், எ-று.
(எ-டு.) வந்தான்-வந்தாய்! சென்றான்-சென்றாய்! என வரும். ‘தொழிலின் ’என்றதனான், ‘கழலாய்! இடையாய்!’ எனக் குறிப்பினும் கொள்க. (16)
அவ்வீற்றுப் பண்புப் பெயர்
136.
பண்புகொள் பெயரும் அதனோ ரற்றே.
இதுவும் அது.
(இ-ள்.) பண்பு கொள் பெயரும் அதனோரற்றே - ‘ஆன்’ ஈற்றுப் பண்பைக் கொண்டு நின்ற பெயரும் அவ்வீற்றுத் தொழிற் பெயர் போல ‘ஆய்’ ஆய் விளி ஏற்கும், எ-று.
(எ-டு.) கரியான் - கரியாய்! தீயன்-தீயாய்! என வரும். (17)
அவ்வீற்று அளபெடைப் பெயர்
137.
அளபெடைப் பெயரே அளபெடை இயல.
இஃது, எய்தாதது எய்துவித்தது.
(இ-ள்.) அளபெடைப்பெயரே அளபெடை இயல - ‘ஆன்’ ஈற்று அளபெடைப்பெயர் இகர ஈற்று அளபெடைப்பெயர் போல (127) மூன்று மாத்திரையின் நீண்டு இயல்பாய் விளி ஏற்கும், எ-று.
(எ-டு.) உழாஅஅன்! கிழாஅஅன்! என வரும். இஃது, அளபெடுத்தலின், ‘ஆன் ஈற்றின் அடங்காதாயிற்று. (18)
னகர ஈற்று முறைப்பெயர்
138.
முறைப்பெயர்க் கிளவி ஏயொடு வருமே
இதுவும் அது.
(இ-ள்.) முறைப்பெயர்க்
கிளவி ஏயொடு வருமே - னகார ஈற்று முறைப்பெயர் ஏகாரம் பெற்று விளி ஏற்கும், எ-று.
(எ-டு.) மகன் - மகனே! மருமகன் - மருமகனே! என வரும். ஐகார ஈற்று
|