நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   616
Zoom In NormalZoom Out


பெயர்ச்சொல்லும் முற்கூறிய  பெயர்  போலப்போல்  அறிய  வந்த
உயர்திணைப் பெயராம், எ-று.
 

‘ஆண்மை,     பெண்மை’ என்பனவற்றிற்கு இவ்வாறு பொருள்
உரையாக்கால், கூறியது கூறலாம். இவை, ‘ஆளும் மகன் - ஆண்மகன்,
பெண்ணாகிய  மகள்  -  பெண்மகள்’  என  விரியும்.  பெண்டாட்டி -
பெண்மையை  ஆள்கின்றவள்.  நம்பி,  நங்கை-உயர்  சொல்.  ‘மகள்’
என்பது, பிரியாது ஒரு சொல்லாயே நின்று பெண்மை உணர்த்திற்று.
 

‘பெண்டன் கிளவி’ என்று பாடம்  ஓதி,  ‘அவ்வாட்டி,  இவ்வாட்டி,
உவ்வாட்டி’ என்பாரும் உளர்.
 

‘ஊரார்  பெண்டென மொழிய’(ஐங். 113)‘என்னைநின், பெண்டெனப்
பிறர்கூறும்  பழிமாறப்  பெறுகற்பின்’  (கலி. 77: 10,11) எனச் சான்றோர்
கூறலின்,  ‘பெண்டு’  என்பதே  பாடம்.  ‘அப்பெண்டு’ என்னுஞ் சுட்டு,
‘கடிசொல் இல்லை’ (452) என்பதனான், ‘பெண்டு’ என நின்றது. (9)
 

உயர்திணை ஒருபாற்பெயர்
 

166. 

எல்லாரு மென்னும் பெயர்நிலைக் கிளவியும்

எல்லீரு மென்னும் பெயர்நிலைக் கிளவியும்

பெண்மை அடுத்த மகனென் கிளவியும்

அன்ன வியல என்மனார் புலவர்.
 

இதுவும், உயர்திணை ஒருபாற்பெயர் உணர்த்துகின்றது.
  

(இ-ள்.)   எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்-எல்லாரும்
என்று  சொல்லப்படுகின்ற  படர்க்கைப்  பெயர்ச் சொல்லும், எல்லீரும்
என்னும்  பெயர்நிலைக் கிளவியும்-எல்லீரும் என்று சொல்லப்படுகின்ற
முன்னிலைப்   பெயர்ச்சொல்லும்,   பெண்மை  அடுத்த  மகன்  என்
கிளவியும் - கட்புலன் ஆயதோர் அமைதித் தன்