களும், கூடி வரு வழக்கின் ஆடு இயல் பெயரே-இளந்துணை மகார் தம்மிற்கூடி விளையாடல் குறித்த பொழுதைக்குத் தாமே படைத் திட்டுக் கொண்ட பெயர்களும், இன்றிவர் என்னும் எண் இயல் பெயரோடு - இத்துணையார் எனத் தமது வரையறை உணர நின்ற எண்ணாகிய இயல்பு பற்றிப் பொருள் உணர்த்தும் பெயருடனே, அன்றி அனைத்தும் அவற்று இயல்பினவே - அவ்வனைத்துப் பெயர்களும் மேற்கூறிய பெயர்கள் போலப் பால் அறியவந்த உயர்திணைப் பெயராம், எ-று.
|
(எ-டு.) ‘அருவாளன், சோழியன்’ எனவும்; ‘சேரமான், மலையமான், பார்ப்பார், அரசர், வாணிகர், வேளாளர், எனவும்; ‘அவையத்தார் அத்தி கோசத்தார், வணிக கிராமத்தார், மாகத்தார் எனவும்; ‘வருவார், செல்வார், தச்சர், கொல்லர், தட்டார், வண்ணார்’ எனவும்; ‘அம்பர் கிழான், பேரூர் கிழான், குட்டுவன், பூழியன், வில்லவன், வெற்பன், சேர்ப்பன்’ எனவும்; ‘கரியான், கரியாள், செய்யான், செய்யாள்’ எனவும்; ‘தந்தையார், தாயர்’ எனவும்; ‘பெருங்காலர், பெருந்தோளர், அலை காதர்’ எனவும்; ‘குறவர், இறவுளர், வேட்டுவர்,
ஆயர், பொதுவர், நுளையர், திமிலர், பரதவர், களமர், உழவர், எயினர், மறவர்’ எனவும்; ‘பட்டி புத்திரர், கங்கை மாத்திரர்’ எனவும்; ‘ஒருவர், இருவர் முப்பத்து மூவர்’ எனவும்; ‘அருவாட்
|