நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   621
Zoom In NormalZoom Out


 

பல்ல     பல  சில  என்னும்  பெயரும் - பல்ல,  பல,  சில  என்று
சொல்லப்படுகின்ற     பெயர்களும்,     உள்ள    இல்ல    என்னும்
பெயரும்-உள்ள,   இல்ல   என்று   சொல்லப்படுகின்ற  பெயர்களும்,
வினைப்பெயர்க்    கிளவியும்-வருவது,    வருவன   என்றாற்போலும்
வினைப்பெயராகிய   சொற்களும்,   பண்பு  கொள்  பெயரும்-கரியது,
கரியன என்றாற்போலும் பண்பினைக் கொண்ட பெயர்களும், இனைத்து
எனக்   கிளக்கும்   எண்ணுக்குறிப்   பெயரும்-ஒன்று,   பத்து,  நூறு
என்றாற்போலச்   சொல்லப்படுகின்ற   இத்துணை   என   வரையறை
உணர்த்தி  எண்ணப்படும் பொருள்மேல் நிற்கும் பெயர்களும், ஒப்பின்
ஆகிய   பெயர்நிலை   உளப்பட  -  பொன்னன்னது,  பொன்னன்ன
என்றாற்போல  உவமத்தினான் பெற்ற பெயர்ச்சொல் உட்பட, அப்பால்
ஒன்பதும்  அவற்றோரன்ன  - அக்கூற்று ஒன்பதும் மேற்கூறிய பெயர்
போலப் பால் அறிய வந்த அஃறிணைப் பெயர்களாம், எ-று. (14)
 

அஃறிணை இயற்பெயர்
 

171. கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே
கொள்வழி யுடைய பலவறி சொற்கே.
 

இதுவும், அஃறிணை இயற்பெயர் கூறுகின்றது.
 

(இ-ள்.)  கள்ளொடு சிவணும் அவ்வியற்பெயரே-கள் என்னும் வாய்
பாட்டொடு  பொருந்தும்  அவ்வஃறிணை  இயற்பெயர்கள்,  பல  அறி
சொற்குக்  கொள்வழி  உடைய - பலவற்றை அறியுஞ் சொல் ஆதற்குக்
கொள்ளும் இடமுடைய, எ-று.
 

(எ-டு.) ஆ, நாய், குதிரை, ஒட்டகம், புலி, புல்வாய். தெங்கு, பலா,
மலை,   கடல்   என்னுந்  தொடக்கத்துச்  சாதிப்பெயர்  இருபாற்கும்
பொதுவாய் நின்றன. கள்ளொடு சிவணி, ஆக்கள், குதிரைகள், கடல்கள்,
மலைகள் எனப் பன்மை விளக்கி நின்றன.
 

‘வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும்’ எனவும்,