நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2290
Zoom In NormalZoom Out


பெறும் எ-று.

உம்மை, எச்சவும்மை யாதலின், உரிப்பொருளாக எடுத்த பாலையும்
நால்வகை நிலத்தும்  மயங்கவும் பெறும் என்றவாறாம். பாலையென்பது
ஒன்று  பிரிந்து  பலவாகிய  கூற்றின்  மேற்றாதலின், ஒற்றுமைப்பட்டு
நிகழ்கின்றார்  இருவர்  பிரிந்துவரலும்  பாலையாமன்றே?  அதனான்,
அதுவுங்  குணங்  காரணமாய்ச்  செம்பால் செம்பாலையாயினாற்போல
நின்றது.

‘‘ஊர்க்கா னிவந்த’’ என்னுங் குறிஞ்சிக்கலியுள்,

‘‘ஆய்தூவி யனமென வணிமயிற் பெடையெனத்
தூதுணம் புறவெனத் துதைந்தநின் னெழினலம்
மாதர்கொண் மானோக்கின் மடநல்லாய் நிற்கண்டார்ப்
பேதுறூஉ மென்பதை யறிதியோ வறியாயோ’’    (கலி.56)

என்பது  நிலம்வரையாது  வந்த  கைக்கிளை.  இதனைக்  குறிஞ்சியுட்
கோத்தார் புணர்ச்சி யெதிர்ப்பாடாகலின்.

‘‘கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
புல்லாளே யாயர் மகள்’’                   (கலி.103)

‘‘வளியா வறியா வுயிர்காவல் கொண்டு
நளிவாய் மருப்பஞ்சு நெஞ்சினார் தோய்தற்
கெளியவோ வாயமக டோள்’’               (கலி.103)

‘‘அவ்வழி முள்ளெயிற் றேஎ ரிவளைப் பெறுமிதோர்
வெள்ளேற் றெருத்தடங்கு வான்;
ஒள்ளிழை, வாருறு கூந்தற் றுயில்பெறும் வைமருப்பிற்
காரி கதனஞ்சான் கொள்பவன்...’’            (கலி.104)

என்றாற்போல    ஏறு   தழுவினாற்கு   உரியள்   இவளென  வந்த
கைக்கிளைகளெல்லாம் முல்லைக்கலி பலவற்றுள்ளுங் காண்க.

‘முன்னைய   மூன்றுங் கைக்கிளைக்  குறிப்பே’ (105) என்பதனான்
அவை கைக்கிளையாயின.

இனி  ‘‘எழின்மருப் பெழில்வேழம்’’  (கலி.138) என்றது முதலிய
நாலு பாட்டும் ஏறிய மடற்றிறமான (51) பெருந்திணை. என்னை?

‘‘மாமேலே னென்று மடல்புணையா நீந்துவேன்
தேமொழி மாத ருறாஅ துறீஇய
காமக் கடலகப் பட்டு’’                     (கலி.139)

என்றாற் போல்வன வருதலின்.

‘‘புரிவுண்ட புணர்ச்சி’’ (கலி.142) என்றது முதலிய ஆறு பாட்டுந்
தேறுதலொழிந்த   காமத்து  மிகுதிறமாகிய  பெருந்திணை.  இவற்றை
நெய்தலுட்  கோத்தார், சாக்காடு  குறித்த  இரங்கற் பொருட்டாகலின்.
கூனுங்  குறளும்  உறழ்ந்து  கூறும் பெருந்திணையும் (கலி.94) ஊடற்
பகுதியவாகலின் மருதத்துட் கோத்தார்.

‘‘கல்லாப் பொதுவனை நீமாறு’’               (கலி.112)

எனப் பொதுவியர் கூறலும்,

‘‘நடா அக்கரும்பமன்ற தோளாரைக் காணின்
விடாஅலோம் பென்றா ரெமர்’’              (கலி.112)

எனப்     பொதுவர்     கூறலும்    மிக்க    காமத்து  மிடலாகிய
பெருந்திணையாகலின் முல்லையுட் கோத்தார்.

‘‘நறவினை வரைந்தார்’’ (99) ‘‘ஈண்டு நீர்மிசை’’ (100) என்னுங்
கலிகளுங்  காமத்து  மிகுதிறத்தான்  அரசனை  நோக்கிச்  சான்றோர்
கூறிவாகலின் மருதத்துக் கோத்தார்.

இனி,

‘‘வான மூர்ந்த வயங்கொளி மண்டிலம்
நெருப்பெனச் சிவந்த வுருப்பவி ரங்காட்டு’’    (அகம்.11)

எனக் காடுறை