நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2299
Zoom In NormalZoom Out


செய்தி,     நிரை   மேய்த்தலும்   வரகு  முதலியன களை கட்டலும்
கடாவிடுதலும்;    யாழ்,    முல்லையாழ்.   பிறவுமென்றதனான்,   பூ,
முல்லையும்   பிடவுந்  தளவுந்  தோன்றியும்;  நீர்  கான்யாறு;  ஊர்,
பாடியுஞ் சேரியும் பள்ளியும்.

குறிஞ்சிக்கு  உணா, ஐவனநெல்லுந் தினையும் மூங்கிலரிசியும்; மா,
புலியும்  யானையுங்  கரடியும்  பன்றியும்;  மரம்,  அகிலும் ஆரமுந்
தேக்குந்  திமிசும் வேங்கையும்; புள், கிளியும் மயிலும்; பறை முருகிய
முந்   தொண்டகப்பறையும்;   செய்தி,  தேன்  அழித்தலுங்  கிழங்கு
அகழ்தலுந்   தினைமுதலியன   விளைத்தலுங்  கிளிகடிதலும்;  யாழ்.
குறிஞ்சி   யாழ்.  பிறவுமென்றதனான்,  பூ  காந்தளும்  வேங்கையுஞ்
சுனைக்கு  வளையும்;  நீர்,  அருவியுஞ்  சுனையும்; ஊர், சிறுகுடியுங்
குறிச்சியும்.

மருதத்திற்கு     உணா,   செந்நெல்லும்  வெண்ணெல்லும்;  மா,
எருமையும்  நீர்  நாயும்; மரம், வஞ்சியுங்  காஞ்சியும் மருதமும்; புள்,
தாராவும்   நீர்க்கோழியும்;   பறை,  மணமுழவும் நெல்லரிகிணையும்;
செய்தி,  நடுதலுங்  களைகட்டலும்  அரிதலுங்  கடாவிடுதலும்;  யாழ்,
மருதயாழ்.  பிறவுமென்றதனான், பூ, தாமரையுங் கழுநீரும்; நீர், யாற்று
நீரும் மனைக்கிணறும் பொய்கையும்; ஊர், உர்க ளென்பனவேயாம்.

நெய்தற்கு உணா, மீன்விலையும் உப்புவிலையும்; மா, உமண் பகடு
போல்வன;  முதலையுஞ்  சுறாவும் மீனாதலின் மாவென்றல் மரபன்று;
மரம்,  புன்னையும்  ஞாழலுங் கண்டலும்; புள் அன்னமும் அன்றிலும்
முதலியன;  பறை,  மீன்  கோட்பறை;  செய்தி, மீன்படுத்தலும் உப்பு
விளைத்தலும்   அவை   விற்றலும்;   யாழ்   நெய்தல்யாழ்.   பிறவு
மென்றதனான்,   பூ   கைதையும்   நெய்தலும்;  நீர்,  மணற்கிணறும்
உவர்க்குழியும்; ஊர், பட்டினமும் பாக்கமும்.

இனிப்  பாலைக்கு உணா, ஆறலைத்தனவுஞ் சூறைகொண்டனவும்;
மா   வலியழிந்த  யானையும்  புலியுஞ்  செந்நாயும்;  மரம்,  வற்றின
இருப்பையும்   ஓமையும்   உழிஞையும்  ஞெமையும்;  புள்,  கழுகும்
பருந்தும்  புறாவும்;  பறை, சூறைகோட்பறையும் நிரை கோட்பறையும்;
செய்தி,  ஆறலைத்தலுஞ்  சூறைகோடலும்;  யாழ்,  பாலையாழ். பிறவு
மென்றதனான்;     பூ,    மராவுங்    குராவும்    பாதிரியும்;    நீர்,
அறுநீர்க்கூவலுஞ்சுனையும்; ஊர், பறந்தலை.

இன்னும் ‘பிறவு’ மென்றதனானே இக் கூறியவற்றிற்குரிய