இது மலய
மாதவன் நிலங்கடந்த
நெடுமுடியண்ணலுழை நரபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக்
குடிப்பிறந்த வேளிர்க்கும் வேந்தன் றொழில் உரித்தென்கிறது.
(இ-ள்.) வேந்து
வினை இயற்கை - முடியுடைவேந்தர்க்குரிய தொழிலாகிய இலக்கணங்கள்; வேந்தனின் ஒரீஇய ஏனோர் மருங்கினும் எய்து இடன் உடைத்து - அம்முடியுடை வேந்தரை யொழிந்த குறநில மன்னரிடத்தும் பொருந்தும் இடனுடையன எ-று.
அவர்க்குரிய இலக்கணமாவன, தம் பகைவயிற் றாமே சேறலுந், தாம் திறைபெற்ற நாடுகாக்கப் பிரிதலும் மன்னர் பாங்கிற் பின்னோரெனப்பட்ட வேளாளரை ஏவிக்கொள்ளுஞ் சிறப்புமாம்.
உ-ம்:
‘‘விலங்கிருஞ் சிமயக் குன்றத் தும்பர் வேறுபன் மொழிய தேஎ முன்னி வினைநசைஇப் பரிக்கும் உரன்மலி நெஞ்சமொடு புனைமா ணெஃகம் வலவயி னேந்திச் செலன்மாண் புற்ற’’
(அகம்.215)
என்புழி வேறு பன்மொழிய தேஎத்தைக் கொள்ளக் கருதிப்
|