நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2320
Zoom In NormalZoom Out


புகழ்த் தந்தைக் குறுதி வேண்டித்
தயங்குநடை முதுமை தாங்கித் தான்றனி
யியங்குநடை யிளமை யின்புற் றீந்த
மான்றே ரண்ண றோன்றுபுகழ் போலத்
துளங்கிரு ளிரவினு மன்ற
விளங்குவை மன்னாலிவ் வியலிடத் தானே’’
                               (தகடூர் யாத்திரை)

இது தெய்வத்தை நோக்கிக் கூறியது.

‘‘மறுவில் தூவிச் சிறுகருங் காக்கை
யன்புடை மரபினின் கிளையோ டாரப்
பச்சூன் பெய்த பைந்தினை வல்சி
பொலம்புனை கலத்தில் தருகுவென் மாதோ
வெஞ்சின விறல்வேல் விடலையோ
டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே’’      (ஐங்குறு.391)

இவ்    வைங்குறுநூறு    நிமித்தத்தொடு  படுத்துப்  புலம்பியது.
நற்சொல்லொடு படுத்தன வந்துழிக் காண்க.

இனி ‘அன்ன பிறவு’ மென்றதனான்,

‘‘ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள்
வான்றோய் இஞ்சி நன்னகர் புலம்பத்
தனிமணி இரட்டுந் தாளுடைக் கடிகை
நுழைநுதி நெடுவேற் குறும்படை மழவர்
முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த
வல்லேர் வாழ்க்கை விழுத்தொடைமறவர்
வல்லாண் பதுக்கைக் கடவுட் பேண்மார்
நடுகற் பீலி சூட்டித் துடிபடுத்துத்
தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்
போக்கருங் கவலைய புலவுநா றருஞ்சுரந்
துணிந்துபிறள் ஆயினள் ஆயினும் அணிந்தணிந்
தார்வ நெஞ்சமோ டாய்நலன் அளைஇத்தன்
மார்புதுணை யாகத் துயிற்றுக தில்ல
துஞ்சா முழவிற் கோவற் கோமான்
நெடுந்தேர்க் காரி