தாய் சேறலும் புலனெறி வழக்கிற்குச் சிறந்தவென்றுணர்க.
உ-ம்:
‘‘வெம்மலை யருஞ்சுர நம்மிவ ணொழிய விருநில முயிர்க்கு மின்னாக் கானம் நெருநற் போகிய பெருமடத் தகுவி யைதக லல்குற் றழையணிக் கூட்டுங் கூழை நொச்சிக் கீழ தென்மகள் செம்புடைச் சிறுவிரல் வரித்த வண்டலுங் காணிரோ கண்ணுடை யீரே’’
(அகம்.275)
வண்டலைக் காணார் தேஎத்து நின்று காணில் ஆற்றீரெனக் கூறினமையின் ஆயத்திற்கன்றி இற்புறஞ் சென்று சேரியோர்க்கு உரைத்ததாயிற்று.
‘‘நிலந்தொட்டுப் புகாஅர் வான மேறார் பிறங்கிரு முந்நீர்க் காலிற் செல்லார் நாட்டி னாட்டி னூரி னூரிற் குடிமுறை குடிமுறை தேரிற் கெடுநரு முளரோநங் காத லோரே’’
(குறுந்.130)
இது
செவிலி தேடத் துணிந்தது. இக் குறுந்தொகையுள் நம்மாற் காதலிக்கப்பட்டாரென்றது அவ் விருவரையும். தாயருமுளரென்றத னாற்றந்தையும்
அன்னையரும் வந்தால் இன்னது செய்வலென்றலும் உளவென்று கொள்க.
‘‘நுமர்வரி னோர்ப்பி னல்ல தமர்வரின் முந்நீர் மண்டில முழுது மாற்றாது’’
என்றாற்
போல்வன. அடி புறத்திடாதாள்
புறம்போதலும் பிரிவென்றற்குச் சேரியுங் கூறினார். அஃது ஏமம் இல் இருக்கை யன்றாதலின். (37)
மனைஅயற் பிரதலும் பிரிவுள் அடங்குமெனல்
|