இவை வணிகர்க்கே உரியன.
இனித்
தலைவன் கூற்றினைத் தலைவியுந் தோழியுங் கொண்டு கூறுவன பெரும்பான்மை. அவையெல்லாம் ‘நிகழ்ந்து
கூறி நிலையலுந் திணையே’ (44) என மேல்வருஞ் சூத்திரத்துட் காட்டுதும்.
வாயினுங் கையினும் வகுத்த பக்கமோடு ஊதியம் கருதிய ஒரு திறத்தானும் - உண்மைப் பொருளிடத்தும் அதற்கேற்ற ஒழுக்கத் திடத்துங் கூறுபடுத்துக் கூறிய நூல்களாற் பெறும் பயனைக் கருதிய ஒரு கூற்றின் கண்ணும்;
என்றது,
வீடுபேற்றிற்கு உதவியாகிய நூல்களை ஓதற்குப் பிரிவுழியு மென்றதாம். இதற்குத் தலைவன் கூற்றாக உதாரணம் வருவன உளவேற் கொள்க.
புகழும் மானமும் எடுத்து வற்புறுத்துலும் - போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறுத்தல் (புறம்.8) அரசியலன்றாதலிற் றமக்கேற்ற புகழும் பெருமையும் எடுத்துக்காட்டி இதனாற் பிரிது மெனத் தலைவியையுந் தோழியையும் வற்புறுத்தற்கண்ணும்;
இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.
தூது
இடையிட்ட வகையினானும் - இருபெரு வேந்தர் பொருவது குறித்துழி இருவரையுஞ் சந்து செய்வித்தற்பொருட்குக் கூட்டத்திற்கு இடையிட்ட பிரிதற் பகுதிக்கண்ணும்:
ஒருவனுழை ஒருவன் மாற்றங்கொண் டுரைத்தலிற் றூதாயிற்று. ‘வகை’யென்றார், வணிகரின் அரசர்க்கும் அரசரின் அந்தணர்க்குந் தூது சிறந்ததென்றற்கும், குறுநிலமன்னர்க்குப் பெரும் பான்மை யென்றற்கும், வேந்தர்தம்மின் இழிந்தாருழைத்
தூதுசேறல் உரித்தன்றென்றற்கும். இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.
ஆகித்
தோன்றும் பாங்கோர் பாங்கினும்-தனக்கு ஆக்கஞ் சிறந்த நட்புடையோராகித் தோன்றும் நட்புடையோர்க்கு
உற்றுழி உதவச் சேறற்கண்ணும்;
இதற்கு ‘‘மலைமிசைக் குலைஇய’’ (அகம்.84) என்பதூஉம் ‘‘இருபெரு
வேந்தர் மாறுகொள்’’(அகம்.174) என்பதூஉம் முன்னர்க் காட்டினாம். (சூ.24.உரை) அவற்றை உதாரணமாகக் கூறிக்கொள்க.
மூன்றன்
பகுதியும் - அறத்தினாற் பொருளாக்கி அப்பொருளாற் காமநுகர்வலென்று பிரிதற்கண்ணும்; மண்டிலத்து அருமையும் - அங்ஙனம் பொருள் வருவாய்க்கு ஏதுவாகிய வேற்றுப் புலங்களின் அருமை கூறிப் பிரிதற்கண்ணும்;
இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.
தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் - தோற்றஞ் சான்ற புகழினராகிய வேற்று வேந்தர்தமது மீக்கூற்றங் கருதிப் பிரிதற்கண்ணும்;
இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.
‘தோன்றல்
சான்ற’ என்றதனாற் றெவ்வர் தன்னின் மிக்காரெனக் கேட்டுழி அழுக்காறு தோன்றலின், அதுவும் பிரிதற்கு ஏதுவா
|