மென்றுணர்க. இஃது அரசர்க்கே யுரித்து.
பாசறைப்
புலம்பலும் - தலைவன் பாசறைக்கண் இருந்து தனக்கு வெற்றி தோன்றிய காலத்துந் தான் அவட்குக் கூறிப் போந்த பருவம் வந்துழியுந் தூது கண்டுழியும் அவள் வருந்துவளென நினைத்துத் தனிமை கூறும் இடத்தும்;
இதனைக் ‘கிழவி நிலையே’ (தொல். பொ. கற். 45) என்னுஞ் சூத்திரத்தான் விலக்குவரெனின், அதற்கு உம்மை விரித்துக் கிழவி நிலையை வினைசெய்யாநிற்றலாகிய இடத்து நினைந்து கூறினானாகக் கூறார்; வெற்றி நிகழுமிடத்துந் தான் குறித்த பருவம் வந்துழியுந் தூது கண்டுழியும் வருத்தம் விளங்கிக் கூற்றுத் தோன்றுமென்று பொருளாமென்றுணர்க.
முடிந்த
காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற் வகையினும் -வகையின் வினைத்திறமுமென மாற்றுக. வேந்தன் எடுத்துக் கொண்ட வினை முடிந்த காலத்துத் தான் போக்கொருப்பட்டு நின்று பாகனொடு விரும்பிக் கூறிய வகையின்கட் டோன்றிய வேறொரு வினைத்திறத்திடத்தும்;
என்றது, அரசனுக்குப் பின்னும் ஒரு பகைமேற் சேறல் உளதாதலை.
காவற்பாங்கின்
பக்கமும் -வேந்தன் றன்னாற் காக்கப்படுவனவாகிய பகுதிகளின் கூற்றிற் பிரியுமிடத்தும்;
பகுதி ஆகுபெயர்;
அவையானை குதிரை முதலியவற்றைக் காத்தலும், அரசர்க்குத் தருமமாகிய வேட்டையிற்சென்று கடுமா கொன்று ஏனையவற்றைக் காத்தலும் முதலியன.
ஆங்கோர்
பக்கமும் - அவன் காத்தற்குரிய பகுதிக்கண்ணே நிற்பார் கூற்றிற் பிரியுமிடத்தும்;
அவர் தாபதர் முதலியோர் பலருமாம்.
பரத்தையின்
அகற்சியிற் பரிந்தோட் குறுகி இரத்தலும் தெளித்தலும் என இருவகையோடு - பரத்தையிற் பிரிதற் காரணத்தாற் பரிபுலம்பெய்திய தலைவியை எய்தி இரத்தலும் இரந்தபின்னர் ஊடலுணர்த்தலும் என்ற இரு பகுதியோடே; உரைத்திற நாட்டம் கிழவோன் மேன - முற்கூறிய இடங்களிற் கூற்று நிகழுங் கூறுபாட்டை நிலைபெறுத்துதல் தலைமகனிடத்தனவாம் எ-று.
உ-ம்:
‘‘ஆறுசெல் வருத்தவுஞ் சீறடி சிவப்பவுஞ் சினைநீங்கு தளிரின் வண்ணம் வாடவுந் தான்வர றுணிந்த விவளினு மிவளுடன் வேய்பயி லழுவ முவக்கும் பேதை நெஞ்சம் பெருந்தக வுடைத்தே’’
இது தோழியொடு வலித்தது.
‘அப்பாற்பட்ட
ஒருதிறத்தானும்’ என்றதனானே, தலைவியிடத்துத் தலைவன் கூறுவன பலவுங் கொள்க.
உ-ம்:
‘‘வாள்வரி வயமான் கோளுகிர் அன்ன செம்முகை யவிழ்ந்த முண்முதிர் முருக்கின் சிதரல் செம்மல் தாஅய் மதரெழின் மாணிழை மகளிர் பூ
|