நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2336
Zoom In NormalZoom Out


வெங் காதலி னோய்மிகச் சாஅய்ச்
சொல்லிய துரைமதி நீயே
முல்லை நல்யாழ்ப் பாணமற் றெமக்கே’’    (ஐங்குறு.478)

இது தூதுகண்டு அவள் கூறிய திறங்கூறெனக் கேட்டது.

‘‘பனிமலர் நெடுங்கண் பசலை பாயத்
துனிமலி துயரமோ டரும்பட ருழப்போள்
கையறு நெஞ்சத் துயவுத்துணை யாகச்
சிறுவரைத் தங்குவை யாயிற்
காண்குவை மன்னாற் பாணவெந் தேரே’’   (ஐங்குறு.477)

இது   தலைவிமாட்டுப்   பாணனைத்   தூதாக   விடுத்த  தலைவன்
கூறியது.

‘‘படந்தடங்கட் பல்பணைபோல் வான்முழங்கன் மேலுங்
கொடுந்தடங்கட் கூற்றமின் னாக - நெடுந்தடங்க
ணீர்நின்ற நோக்கி னெடும்பணைமென் றோளாட்குத்
தேர்நின்ற தென்னாய்நீ சென்று’’      (திணைமாலை115)

இஃது இளையோரைத் தூது விட்டது.

‘‘ஐய வாயின செய்யோள் கிளவி
கார்நா ளுருமொடு கையறப் பிரிந்தென
நோய்நன்கு செய்தன வெமக்கே
யாமுறு துயரமவ ளறியினோ நன்றே’’      (ஐங்குறு.441)

இது  வினைமுடியாமையிற்  பருவங்கண்டு  மீளப்பெறாத தலைவன்
தூதர்  வார்த்தை  கேட்டு  வருந்தியது.  பிறவும்  வேறுபட  வருவன
கொள்க.

‘‘முரம்புகண் ணுடையத் திரயுந் திகிரியொடு
பணைநிலை முனைஇய வயமாப் புணர்ந்து
திண்ணிதின் மாண்டன்று தேரே
யொண்ணுதற் காண்குவம் வேந்துவினை விடினே’’ 
                                  
(ஐங்குறு.449)

இது  வேந்தன்  திறைகொண்டு மீள்வுழித் தானுஞ் சமைந்த தேரை
அழைத்துக்கண்டு  ‘திண்ணிதின்  மாண்டன்று தே’ ரெனப் பாகனொடு
கூறியவழி  அவ்வேந்தன்  திறைவாங்காது  வினைமேற் சென்றானாகப்
பாகனை   நோக்கிக்  கூறியது.  இவை  ஐங்குறுநூறு.  ‘‘மலைமிசைக்
குலைஇய’’
  என்னும்  (84)  அகப்பாட்டும்  அது.  கலித்தொகையுட்
‘‘புத்தியானை வந்தது காண்பான் யான் றங்கினேன்’’(மருதக்கலி.32)
என்பன முதலியவற்றான் யானை முதலியவற்றையுங்,  கடவுட்பாட்டான்
(மருதக்கலி.28)    தாபதரையுங்    காத்தற்குப்    பிரிந்தே   னெனக்
கூறினானென்பது பெற்றாம்.

‘‘ஒரூஉக், கொடியிய னல்லார் குரனாற்றத் துற்ற
முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத்
தொடிய வெமக்குநீ யாரை பெரியார்க்
கடியரோ வாற்றா தவர்;
கடியர் தமக், கியார்சொல்லத் தக்காரா மாற்று;
வினைக்கெட்டு, வாயல்லா வெண்மை யுரையாது கூறுநின்
மாய மருள்வா ரகத்து;
ஆயிழாய், நின்கண் பெறினல்லா லின்னுயிர் வாழ்கல்லா
வென்க ணெவனோ தவறு;
இஃதொத்தன், புள்ளிக்கள்வன் புனல்சேர் பொதுக்கம்போல்
வள்ளுகிர் போழ்ந்தனவும் வாளெயி