வலந்தனென் வாழி தோழி கானற் புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவற் கடுமான் பூண்ட நெடுந்தேர் கடைஇ நடுநாள் வரூஉ மியறேர்க் கொண்கனொடு செலவயர்ந் திசினால் யானே யலர்சுமந் தொழிகவிவ் வழுங்க லூரே.’’
(நற்.149)
இந் நற்றிணை அலர் அச்சம் நீங்கினமை கூறியது.
‘‘சேட்புல முன்னிய வசைநடை யந்தணிர் நும்மொன் றிரந்தனென் மொழிவ லெம்மூர்த் தாய்நயந் தெடுத்த வாய்நலங் கவின்பெற வாரிடை யிறந்தன ளென்மி னேரிறை முன்கையென் னாயத் தோர்க்கே.’’
(ஐங்குறு.384)
இவ் வைங்குறுநூறு ‘யான் போகின்றமை ஆயத்திற்கு உரைமின்’ என்றது
‘‘கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறிக் கோள்வல் வேங்கைய மலை பிறக் கொழிய வேறுபல் லருஞ்சுர மிறந்தன ளவளெனக் கூறுமின் வாழியோ வாறுசென் மாக்க ணற்றோ ணயந்துபா ராட்டி யெற்கெடுத் திருந்த வறனில் யாய்க்கே.’’
(ஐங்குறு.385)
இவ் வைங்குறுநூறு இன்று யான் தேரேறி வருத்தமின்றிப் போகின்றமை யாய்க்கு உரைமின் என்றது.
‘‘கவிழ்மயி ரெருத்திற் செந்நா யேற்றை குருளைப் பன்றி கொள்ளாது கழியுஞ் சுரநனி வாரா நின்றன ளென்பது முன்னுற விரைந்தனி ருரைமி னின்னகை முறுவலெம் மாயத் தோர்க்கே.’’
(ஐங்குறு.397)
இவ் வைங்குறுநூறு மீள்கின்றாளென்று என் வரவு ஆயத் தார்க்குக் கூறுமின் என்றது.
‘‘வேய்வனப் பிழந்த தோளும் வெயிறெற வாய்கவின் றொலைந்த நுதலு நோக்கிப் பரியல் வாழி தோழி பரியி னெல்லையி லிடும்பை தரூஉ நல்வரை நாடனொடு வந்த மாறே.’’
(ஐங்குறு.392)
இவ் வைங்குறுநூறு மீண்டும் வந்த தலைவி வழிவரல் வருத்தங் கண்டு வருந்திய தோழிக்குக் கூறியது.
‘‘அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத் தேன்மயங்கு பாலினு மினிய வவர்நாட் டுவலைக் கூவற் கீழ மானுண் டெஞ்சிய கலுழி நீரே.’’
(ஐங்குறு.203)
இஃது உடன்போய் மீண்ட
தலைவி ‘நீ சென்ற நாட்டு நீர் இனியவல்ல; எங்ஙனம் நுகர்ந்தா’யென்ற தோழிக்குக் கூறியது.
‘‘அறஞ்சா லியரோ வறஞ்சா லியரோ வறனுண் டாயினு மறஞ்சா லியரோ வாள்வனப் புற்ற வருவிக் கோள்வரு மென்னையை மறைத்த குன்றே.’’ (ஐங்குறு.312)
இவ் வைங்குறுநூறு நின் ஐயன்மார் வந்துழி நிகழ்ந்தது என்னென்ற தோழிக்குத்
தலைவி தலைவனை மறைத்த மலையை வாழ்த்தியது. பிறவும் வேறுபட வருவன வெல்லாம் இதனான் அமைக்க.
இனி ஆயத்தார் கூற்று நிகழுமாறு:-
‘‘மானதர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி தான்வரு மென்ப
|