நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2342
Zoom In NormalZoom Out


சென்ற  இளமை தரற்கு’  என்றது  இளமையதருமை; ‘உள்ளந் துரப்ப’
என்றது  உள்ளத்தான்  உஞற்றுதலான்  தாளான்  பக்கம்; ‘சென்றோர்
முகப்பப்  பொருளுங்  கிடவாது’  என்றது தகுதியது அமைதி, தத்தம்
நிலைமைக்  கேற்பப்  பொருள்செய்ய  வேண்டுதலின் அது பாணிக்கு
மென்றலின்; ‘ஒரோஒகை தம்முட் டழீஇ ஒரோஒகை, ஒன்றன்கூ றாடை
உடுப்பவரே யாயினும்’ என்றது இன்மைய திளிவு; ‘வளமை விழைதக்க
துண்டோ’  என்றது  உடைமைய  துயர்ச்சி;  பிரிந்துறை  சூழாதி ஐய’
என்றது     அன்பினதகலம்,     ‘பிரிந்துறைந்      தன்புபெருக்கல்
வேண்டாதம்முளொன்றினார்   வாழ்கையே   வாழ்க்கை’   என்றலின்;
‘தொய்யிலுஞ் சுணங்கும் நினைத்துக்காண்’  என்றது  அகற்சிய தருமை.
இவ்     வெட்டுந் தாமே கூறல்  வேண்டினமையின்  முன்னொருகால்
தலைவன்   கூறக்கேட்டுத்   தோழியுந்   தலைவியும்   உணர்ந்தமை
கூறியவாறு காண்க.

‘‘பொய்யற்ற கேள்வியாற் புரையோரைப் படர்ந்துநீ
மையற்ற படிவத்தான் மறுத்தர லொல்வதோ’’    (கலி.15)

என்பது  ஓதற்குப்  பிரிவலெனத்  தலைவன்  கூறியது கேட்ட தோழி
கூறியது.

‘‘நோற்றோர் மன்ற தாமே கூற்றம்
கோளுற விளியார்பிறர் கொளவிளிந் தோரெனத்
தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்
நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந்து
ஆழல் வாழி தோழி தாழாஅது
உருமெனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால்
வரிமரல் நோன்ஞாண் வார்சிலைக் கொளீஇ
அருநிறத் தழுத்திய அம்பினர் பலருடன்
அண்ணல் யானை வெண்கோடு கொண்டு
நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயருங்
கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்
மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழிவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்
பழகுவ ராதலோ வரிதே முனாஅது
முழவுறழ் திணிதோ ணெடுவே ளாவி
பொன்னுடை நெடுநகர்ப் பொதினி அன்னநின்
ஒண்கேழ் வனமுலைப் பொலிந்த
நுண்பூண் ஆகம் பொருந்துதன் மறந்தே’’     (அகம்.61)

இவ்  வகப்பாட்டின் மூப்பினும் பிணியினும் இறவாது அமர்க்களத்து
வீழந்தோரே   துறக்கம்  பெறுவரெனத்  தன்சாதிக்கேற்பத்  தலைவன்
புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலைத் தோழி கூறினாள்.

‘‘வேந்தன் குறைமொழிந்து வேண்டத் தலைப்பிரிந்தார்
தாந்தங் குறிப்பின ரல்லரா - லேந்திழாய்
கண்பனி வாரக் கலங்கல் பிரிவரோ
தண்பனி நாளே