இதுமுன்
ஈரேழாமென்ற
துறை, இருவகைப்பட்டு இருபத்தெட்டாமென்கின்றது.
(இ-ள்)
படை இயங்கு அரவம் - நிரைகோடற்கு எழுந்த படை பாடிப்புறத்துப் பொருந்தும் அரவமும், நிரைமீட்டற்கு எழுந்த படை விரைந்து செல்லும் அரவமும்;
உ-ம்:
‘‘வெவ்வாண் மறவர் மிலைச்சிய வெட்சியாற் செவ்வானஞ் செல்வதுபோற் செல்கின்றா - ரெவ்வாயு மார்க்குங் கழலொலி யாங்கட் படாலியரோ போர்க்குந் துடியொடு புக்கு’’
(பெரும்பொருள் விளக்கம்.
புறத்திரட்டு. 1236. நிரைகோடல்.5)
‘‘அடியதி ரார்ப்பின ராபெயர்த்தற் கன்னாய் கடிய மறவர் கதழ்ந்தார் - மடிநிரை மீளாது மீளார் விறல்வெய்யோர் யாதாங்கொல் வாளார் துடியர் வளம்’’
(புறத்திரட்டு.1245)
இவை கண்டோர் கூற்று.
பாக்கத்து விரிச்சி - நிரைகோடற்கு எழுந்தோர் போந்து விட்ட பாக்கத்துக் கங்குலின் நல்வாய்ப்புட் கேட்டலும், நிரை மீட்டற்கு எழுந்தோர் இடைப்புலத்துப் புறம்போந்தோர் கூறியவற்றை வாய்ப்புள்ளாகக் கேட்டலும்;
உ-ம்:
‘‘திரைகவுள் வெள்வாய்த் திரிந்துவீழ் தாடி நரைமுதியோ னின்றுரைத்த நற்சொ - னிரையன்றி யெல்லைநீர் வைய மிறையோர்க் களிக்குமால் வல்லைநீர் சென்மின் வழி’’
(பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1239)
‘‘வந்தநீர் காண்மினென் றாபெயர்ப்போர் மாட்டிசைத்த பைந்தொடியார் கூறும் பறவாப்பு - ளுய்ந்த’’
‘‘நிரையளவைத் தன்றியு நீர்சூழ் கிடக்கை வரையளவைத் தாவதா மண்’’
இவை விரிச்சியை வியந்தன.
புடைகெடப் போகிய செலவே - நிரைகோடற்கு எழுந்
|