பரந்துசென் மள்ளர் பதிந்தா - ரரந்தை விரிந்தவியு மாறுபோல் விண்டோயத் தோன்றி யெரிந்தவியும் போலுமிவ் வூர்.’’
இது கண்டோர் கூற்று.
‘‘இருநில மருங்கி னெப்பிறப் பாயினு மருவின் மாலையோ வினிதே யிரவி னாகோண் மள்ளரு மருள்வரக் கானத்து நாம்புறத் திறுத்தென மாகத் தாந்தங் கன்றுகுரல் கேட்டன போல நின்றுசெவி யோர்த்தனசென்றுபடு நிரையே.’’
(தகடூர் யாத்திரை, புறத்திரட்டு.1251.நிரைமீட்சி)
இது மறவர் கூற்று.
முற்றிய ஊர்கொலை.
நிரைகோடற்கு எழுந்தோர் அவர் புறஞ்சேரியை வளைத்துக்கொண்டு ஆண்டுநின்ற நிரைகாவலரைக் கொன்று
பகையறுத்தலும்,
நிரைமீட்டற்கு எழுந்தோர் அவ்வூரைவிட்டுச் சிற்றூரைக் காத்துக் கோடலும்;
உ-ம்:
‘‘அரவூர் மதியிற் கரிதூர வீம விரவூ ரெரிகொளீஇக் கொன்று - நிரைநின்ற பல்லான் றொழுவும் பகற்காண்மார் போர்கண்டோர் கொல்வார்ப் பெறாஅர் கொதித்து.’’
‘‘சென்ற நிரைப்புறத்துச் சீறூர்த் தொடைகொண்டு நின்ற மறவர் நிலஞ்சேர்ந்தார் - கொன்றாண் டிகலுழந்த வல்வில் லிளையோர்புண் டீரத் துகளெழுங்கொல் பல்லான் றொழு.’’
இவை கண்டோர் கூற்று.
ஆகோள்- நிரைகோடற்கு எழுந்தோர் எதிர்விலக்குவோர் இலராக நிரையகப்படுத்தி மீட்டலும், நிரைமீட்டற்கு எழுந்தோர் தமது நிரையை அற்றமின்றி மீட்டலும்;
உ-ம்;
‘‘கொடுவரி கூடிக் குழுஉக்கொண் டனைத்தா னெடுவரை நீள்வேய் நரலும் - நடுவூர் கணநிரை கைக்கொண்டு கையகலார் நின்ற நிணநிரை வேலார் நிலை’’ (புற.வெ.வெட்சி.9) கடல்புக்கு மண்ணெடுத்த காரேனக் கோட்டின் மிடல்பெரி தெய்தின மாதோ - தொடலைக் கரந்தை மறவர்க் கருதார் குழாஅந் துரந்து நிரைமீட்ட தோள்.’’
(பெரும்பொருள் விளக்கம். புறத்திரட்டு.1247.நிரைமீட்சி.5)
இவை கண்டோர் கூற்று.
தொடலைக் கரந்தையெனக்
கரந்தை சூடினமை கூறினார். தன்னுறுதொழிலான் நிரைமீட்டலின். இது பொதுவியற் கரந்தையிற் (60) கூறுதும்.
பூசன் மாற்று - நிரைகொண்டு போகின்றார் தம்பின்னே உளைத்தற் குரலோடு
தொடர்ந்து சென்று ஆற்றிடைப் போர் செய்தோரை மீண்டு பூசலை மாற்றுதலும், நிரையை மீட்டுக் கொண்டு போகின்றார் தம்பின்னர்வந்து போர்செய்தோரை மீண்டு நின்று பூசலை மாற்றுதலும்;
உ-ம்:
‘‘ஒத்த வயவ ரொருங்கவிய நாண்படரத் தத்த மொலியுந் தவிர்ந்தன-வைத்தகன்றார் தம்பூசன் மாற்றி நிரைகொள்வான் றாக்கினார் வெம்பூசன் மாற்றிய வில்.’’
|