திறத்தானும் -
உண்மைப் பொருளிடத்தும் அதற்கேற்ற ஒழுக்கத் திடத்துங் கூறுபடுத்துக் கூறிய நூல்களாற் பெறும் பயனைக் கருதிய ஒரு கூற்றின் கண்ணும்; என்றது,
வீடுபேற்றிற்கு உதவியாகிய நூல்களை ஓதற்குப் பிரிவுழியு மென்றதாம்.
இதற்குத் தலைவன் கூற்றாக உதாரணம் வருவன உளவேற் கொள்க. புகழும் மானமும் எடுத்து வற்புறுத்துலும் - போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறுத்தல்
(புறம்.8) அரசியலன்றாதலிற் றமக்கேற்ற புகழும் பெருமையும்
எடுத்துக்காட்டி இதனாற் பிரிது மெனத் தலைவியையுந் தோழியையும் வற்புறுத்தற்கண்ணும்; இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க. தூது
இடையிட்ட வகையினானும் - இருபெரு வேந்தர் பொருவது குறித்துழி இருவரையுஞ்
சந்து செய்வித்தற்பொருட்குக் கூட்டத்திற்கு இடையிட்ட பிரிதற் பகுதிக்கண்ணும்: ஒருவனுழை ஒருவன் மாற்றங்கொண் டுரைத்தலிற் றூதாயிற்று. ‘வகை’யென்றார், வணிகரின் அரசர்க்கும் அரசரின் அந்தணர்க்குந் தூது சிறந்ததென்றற்கும், குறுநிலமன்னர்க்குப் பெரும் பான்மை யென்றற்கும், வேந்தர்தம்மின் இழிந்தாருழைத்
தூதுசேறல் உரித்தன்றென்றற்கும். இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க. ஆகித்
தோன்றும் பாங்கோர் பாங்கினும்- தனக்கு ஆக்கஞ் சிறந்த நட்புடையோராகித் தோன்றும் நட்புடையோர்க்கு
உற்றுழி உதவச் சேறற்கண்ணும்; இதற்கு
‘‘மலைமிசைக் குலைஇய’’ (அகம்.84) என்பதூஉம் ‘‘இருபெரு
வேந்தர் மாறுகொள்’’(அகம்.174) என்பதூஉம் முன்னர்க் காட்டினாம். (சூ.24.உரை) அவற்றை உதாரணமாகக் கூறிக்கொள்க. மூன்றன்
பகுதியும்- அறத்தினாற் பொருளாக்கி அப்பொருளாற் காமநுகர்வலென்று பிரிதற்கண்ணும்; |