மண்டிலத்து
அருமையும் - அங்ஙனம் பொருள் வருவாய்க்கு ஏதுவாகிய வேற்றுப் புலங்களின் அருமை கூறிப் பிரிதற்கண்ணும்; இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க. தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் - தோற்றஞ் சான்ற புகழினராகிய வேற்று வேந்தர்தமது மீக்கூற்றங் கருதிப் பிரிதற்கண்ணும்; இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க. ‘தோன்றல்
சான்ற’ என்றதனாற் றெவ்வர் தன்னின் மிக்காரெனக் கேட்டுழி அழுக்காறு
தோன்றலின், அதுவும் பிரிதற்கு ஏதுவாமென்றுணர்க. இஃது அரசர்க்கே யுரித்து. பாசறைப்
புலம்பலும் - தலைவன் பாசறைக்கண் இருந்து தனக்கு வெற்றி தோன்றிய காலத்துந் தான் அவட்குக் கூறிப் போந்த பருவம் வந்துழியுந் தூது கண்டுழியும் அவள் வருந்துவளென நினைத்துத் தனிமை கூறும் இடத்தும்; இதனைக்
‘கிழவி நிலையே’ (தொல். பொ. கற். 45) என்னுஞ் சூத்திரத்தான் விலக்குவரெனின்,
அதற்கு உம்மை விரித்துக் கிழவி நிலையை வினைசெய்யாநிற்றலாகிய
இடத்து நினைந்து கூறினானாகக் கூறார்; வெற்றி நிகழுமிடத்துந் தான் குறித்த பருவம் வந்துழியுந் தூது கண்டுழியும்
வருத்தம் விளங்கிக் கூற்றுத் தோன்றுமென்று பொருளாமென்றுணர்க. முடிந்த
காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற் வகையினும் -வகையின் வினைத்திறமுமென மாற்றுக. வேந்தன் எடுத்துக் கொண்ட வினை
முடிந்த காலத்துத் தான் போக்கொருப்பட்டு நின்று பாகனொடு விரும்பிக்
கூறிய வகையின்கட் டோன்றிய வேறொரு வினைத்திறத்திடத்தும்; என்றது, அரசனுக்குப் பின்னும் ஒரு பகை |