நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3279
Zoom In NormalZoom Out


வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்
நின்றுகொய மலரு நாடனொ
டொன்றேன் றோழிமற் றொன்றி னானே’’   
(குறுந்.208)

இக்  குறுந்தொகை,  பிறிதொன்றின்   பொருட்டுப்   பொருகின்ற
யானையான்  மிதிப்புண்ட  வேங்கை நசையற உணங்காது மலர்கொய்
வார்க்கு     எளிதாகி  நின்று பூக்கும் நாடனென்றதனானே தலைவன்
நுகருங்  காரணத்தானன்றி  வந்து எதிர்ப்பட்டுப் புணர்ந்து நீங்குவான்
நம்மை  இறந்துபாடு  செய்வியாது ஆற்றுவித்துப் போயினானெனவும்,
அதனானே  நாமும்  உயிர்தாங்கியிருந்து  பலரானும் அலைப்புண்ணா
நின்றனம்    வேங்கை    மரம்   போல   எனவும்,   உள்ளத்தான்
உவமங்கொள்ள வைத்தவாறு காண்க.

ஒழிந்தனவும் வந்துழிக் காண்க.

இனி அஃது    உள்ளத்தான்    உய்த்துணரவேண்டுமென  மேற்
கூறுகின்றார்.                                           (47)

உள்ளுறை யுவமமாவது இதுவெனல்
 

48. உள்ளுறுத் திதனோ டொத்துப்பொருண் முடிகென
உள்ளுறுத் திறுவதை யுள்ளுறை யுவமம்.
 

இதுவும் அங்ஙனம்  பிறந்த  உள்ளுறையுவமத்தினைப்  பொருட்கு
உபகாரம்பட உவமங்கொள்ளுமாறு கூறுகின்றது.

(இ-ள்.) இதனோடு ஒத்துப் பொருள் முடிகென  உள்ளுறுத்து-யான்
புலப்படக்    கூறுகின்ற    இவ்வுவமத்தோடே   புலப்படக்   கூறாத
உவமிக்கப்படும்  பொருள்  ஒத்து  முடிவதாகவென்று  புலவன்  தன்
உள்ளத்தே கருதி; உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம் - தான்
அங்ஙனங்  கருதும்  மாத்திரையே  யன்றியுங்  கேட்டோர் மனத்தின்
கண்ணும்   அவ்வாறே  நிகழ்த்துவித்து  அங்ஙனம்  உணர்த்துவதற்கு
உறுப்பாகிய    சொல்லெல்லாம்    நிறையக்    கொண்டு   முடிவது
உள்ளுறையுவமம் எ-று.

இதனானே புலவன் தான் கருதியது கூறாதவழியுங் கே