கானக்கோழியுஞ் சிவலும்;
பறை, ஏறுகோட்பறை; செய்தி, நிரை மேய்த்தலும் வரகு முதலியன களை கட்டலும் கடாவிடுதலும்; யாழ், முல்லையாழ். பிறவுமென்றதனான், பூ, முல்லையும் பிடவுந் தளவுந் தோன்றியும்; நீர் கான்யாறு; ஊர், பாடியுஞ் சேரியும் பள்ளியும். குறிஞ்சிக்கு
உணா, ஐவனநெல்லுந் தினையும் மூங்கிலரிசியும்; மா, புலியும் யானையுங் கரடியும் பன்றியும்; மரம், அகிலும் ஆரமுந் தேக்குந் திமிசும் வேங்கையும்; புள், கிளியும் மயிலும்; பறை முருகிய முந் தொண்டகப்பறையும்; செய்தி, தேன் அழித்தலுங் கிழங்கு அகழ்தலுந் தினைமுதலியன விளைத்தலுங் கிளிகடிதலும்; யாழ். குறிஞ்சி யாழ். பிறவுமென்றதனான், பூ காந்தளும் வேங்கையுஞ் சுனைக்கு வளையும்; நீர், அருவியுஞ் சுனையும்; ஊர், சிறுகுடியுங் குறிச்சியும். மருதத்திற்கு உணா,
செந்நெல்லும் வெண்ணெல்லும்; மா, எருமையும்
நீர் நாயும்; மரம், வஞ்சியுங் காஞ்சியும் மருதமும்; புள், தாராவும்
நீர்க்கோழியும்; பறை, மணமுழவும் நெல்லரிகிணையும்; செய்தி, நடுதலுங் களைகட்டலும் அரிதலுங் கடாவிடுதலும்; யாழ், மருதயாழ். பிறவுமென்றதனான், பூ, தாமரையுங் கழுநீரும்; நீர், யாற்று நீரும் மனைக்கிணறும் பொய்கையும்; ஊர், உர்க ளென்பனவேயாம். நெய்தற்கு
உணா, மீன்விலையும் உப்புவிலையும்; மா, உமண் பகடு போல்வன; முதலையுஞ் சுறாவும் மீனாதலின் மாவென்றல் மரபன்று; மரம், புன்னையும்
ஞாழலுங் கண்டலும்; புள் அன்னமும் அன்றிலும் முதலியன; பறை, மீன் கோட்பறை; செய்தி, மீன்படுத்தலும் உப்பு விளைத்தலும் அவை விற்றலும்; யாழ் நெய்தல்யாழ். பிறவு மென்றதனான், பூ கைதையும் நெய்தலும்; நீர், மணற்கிணறும் உவர்க்குழியும்; ஊர், பட்டினமும் பாக்கமும். இனிப்
பாலைக்கு உணா, ஆறலைத்தனவுஞ் சூறைகொண்டனவும்; மா வலியழிந்த யானையும் புலியுஞ் செந்நாயும்; மரம், வற்றி
|