பெயர்க்குஞ் செல்வ முடையோர்க்கு நின்றன்று விறலெனப் பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கிச் செல்வே மாதல் அறியாள் முல்லை நேர்கால் முதுகொடி குழைப்ப நீர்சொரிந்து காலை வானத்துக் கடுங்குரற் கொண்மூ முழங்குதொறுங் கையற் றொடுங்கிநப் புலந்து பழங்கண் கொண்ட பசலை மேனியள் யாங்கா குவள்கொ றானே வேங்கை ஊழுறு கிளர்வீ கடுப்பக் கேழ்கொள ஆகத் தரும்பிய மாசறு சுணங்கினள் நன்மணல் வியலிடை நடந்த சின்மெல் லொதுக்கின் மாஅ யோளே.’’
(அகம்.174) இது மீள்வான் நெஞ்சிற் குரைத்தது. இதனுட் ‘‘பூக்கோளேய தண்ணுமை விலக்கிச் செல்வே’’மென்றலின் அரசனாற் சிறப்புப்பெற்ற தலைவன் என்பதாயிற்று, இன்னுஞ் சான்றோர் செய்யுள்களுள் இங்ஙனம் வருவனவற்றை
அவற்றின் பொருணோக்கி உணர்க.
(24) பாலை என்னும் பிரிவின் வகை
|