இஃது
இத்துணையும் பாலைக்கு உரிய இலக்கணங் கூறி, மகடூஉ அதிகாரப்படுதலிற் பெருந்திணைக்கு உரியதோர்
இலக்கணங் கூறுகின்றது. (இ-ள்.)
எத்திணை
மருங்கினும் - கைக்கிளைமுதற் பெருந்திணையிறுவாய் ஏழன்கண்ணும்; மகடூஉ மடல்மேல் நெறிமை -தலைவி மடலேறினாளாகக் கூறும் புலனெறிவழக்கம்; பொற்புடைமை இன்மையான - பொலிவுடைமையின்று; ஆதலான் அது கூறப்படாது எ-று. ‘‘கடலன்ன காம முழந்து மடலேறாப் பெண்ணிற் பெருந்தக்க தில்’’
(குறள்.1137) எனவரும். ‘‘கடலன்ன காமத்த ராயினும் பெண்டிர் மடலூரார் மைந்தர்மே லென்ப - மடலூர்தல் காட்டுகேன் வம்மின் கலிவஞ்சி யார்கோமான் வேட்டமா மேல்கொண்ட போழ்து’’ என்றாராலோவெனின், இது மடலேற்றன்று; ஏறுவலெனக் கூறிய துணையாம். உடன்போக்கின்கண் நற்றாயிரங்கற் பகுதிகளாவன
|