றாற்கு அவள் உணர்த்தினே னென்றலுந் தலைவி மீண்டு வந்துழி ஊரது நிலைமை கூறுதலுங் கொள்க. ‘‘கருவிரன்
மந்திக் கல்லா விளம்பார்ப்பு
இருவெதி ரீர்ங்கழை யேறிச் சிறுகோன்
மதிபுடைப் பதுபோற் றோன்று நாட
வரைந்தனை நீயெனக் கேட்டியா
னுரைத்தனெ னல்லனோ வஃதென்யாய்க்கே’’
(ஐங்குறு.280) புள்ளு
மறியாப் பல்பழம் பழுனி
மடமா னறியாத் தடநீர் நிலைஇச்
சுரநனி யினிய வாகுக வென்று
நினைத்தொறுங் கலுழு மென்னினு
மிகப்பெரிது கலங்கின்று தோழிநம் மூரே.’’
(ஐங்குறு.398) இன்னும்,
இதனானே செய்யுட்கண் வேறுபட
வருவன வெல்லாம் அமைத்துக்கொள்க. ‘‘ஊஉ
ரலரெழச் சேரி கல்லென
ஆனா தலைக்கு மறனி லன்னை
தானே யிருக்கத்தன் மனையே யானே
நெல்லி தின்ற முள்ளெயிறு தயங்க
உணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு
விண்டொட நிவந்த விலங்குமலைக் கவாஅற்
கரும்புநடு பாத்தி யன்ன
பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே.’’
(குறுந்.262) இது போக்கு
நேர்ந்தமை தோழி கூறியது. பிறவுமன்ன.
(39) கொண்டுதலைக்கழிந்துழிக்
கண்டோர் கூற்றுக்கள் நிகழுமாறு
|