நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3816
Zoom In NormalZoom Out


மாறுகொள்’’  (அகம்.174)   என்பதூஉம்   முன்னர்க்   காட்டினாம்.
(சூ.24.உரை) அவற்றை உதாரணமாகக் கூறிக்கொள்க.
  

மூன்றன்    பகுதியும் - அறத்தினாற் பொருளாக்கி அப்பொருளாற்
காமநுகர்வலென்று   பிரிதற்கண்ணும்;   மண்டிலத்து  அருமையும்  -
அங்ஙனம்  பொருள்  வருவாய்க்கு  ஏதுவாகிய  வேற்றுப் புலங்களின்
அருமை கூறிப் பிரிதற்கண்ணும்;
  

இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.  

தோன்றல்     சான்ற மாற்றோர் மேன்மையும் - தோற்றஞ் சான்ற
புகழினராகிய     வேற்று    வேந்தர்தமது    மீக்கூற்றங்    கருதிப்
பிரிதற்கண்ணும்;
  

இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.  

‘தோன்றல்   சான்ற’ என்றதனாற் றெவ்வர் தன்னின் மிக்காரெனக்
கேட்டுழி     அழுக்காறு     தோன்றலின்,     அதுவும்   பிரிதற்கு
ஏதுவாமென்றுணர்க. இஃது அரசர்க்கே யுரித்து.
  

பாசறைப்   புலம்பலும் - தலைவன் பாசறைக்கண் இருந்து தனக்கு
வெற்றி  தோன்றிய காலத்துந் தான் அவட்குக் கூறிப் போந்த பருவம்
வந்துழியுந்  தூது  கண்டுழியும்  அவள்  வருந்துவளென நினைத்துத்
தனிமை கூறும் இடத்தும்;
  

இதனைக்     ‘கிழவி நிலையே’ (தொல். பொ. கற். 45)  என்னுஞ்
சூத்திரத்தான்  விலக்குவரெனின்,  அதற்கு  உம்மை  விரித்துக் கிழவி
நிலையை  வினைசெய்யாநிற்றலாகிய  இடத்து நினைந்து கூறினானாகக்
கூறார்;  வெற்றி நிகழுமிடத்துந் தான் குறித்த பருவம் வந்துழியுந் தூது
கண்டுழியும்    வருத்தம்    விளங்கிக்    கூற்றுத்   தோன்றுமென்று
பொருளாமென்றுணர்க.
  

முடிந்த  காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற் வகையினும்
-வகையின்  வினைத்திறமுமென மாற்றுக. வேந்தன் எடுத்துக் கொண்ட
வினை  முடிந்த காலத்துத் தான் போக்கொருப்பட்டு நின்று பாகனொடு
விரும்பிக்     கூறிய     வகையின்கட்     டோன்றிய    வேறொரு
வினைத்திறத்திடத்தும்;
  

என்றது, அரசனுக்குப் பின்னும் ஒரு பகைமேற் சேறல் உளதாதலை.  

காவற்பாங்கின் பக்கமும் -வேந்தன் றன்னாற் காக்கப்படுவனவாகிய
பகுதிகளின் கூற்றிற் பிரியுமிடத்தும்;
  

பகுதி    ஆகுபெயர்; அவையானை   குதிரை   முதலியவற்றைக்
காத்தலும், அரசர்க்குத் தருமமாகிய வேட்டை