நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4891
Zoom In NormalZoom Out


மென்றதனானும், இந்திர விழவூ ரெடுத்த காதையானும் உணர்க.

இனி     நெய்தனிலத்தில்   நுளையர்க்கு   வலைவளங்  தப்பின்
அம்மகளிர்  கிளையுடன்  குழீஇச்  சுறவுக்கோடு  நட்டுப் பரவுக்கடன்
கொடுத்தலின், ஆண்டு வருணன் வெளிப்படுமென்றார். அவை,

‘‘சினைச்சுறவின் கோடுநட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினான்’’ (பத்து. பட்டின.86.7)

எனவும்,

‘‘கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கி’’   (அகம்.110)

எனவும்,

‘‘அணங்குடைப் பனித்துறை கைதொழு தேத்தி
யாயு மாயமொ டயரும்’’                 (அகம்.240)

எனவும் வரும்.

இனிப் பாலைக்குச்

‘‘சினைவாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகெனக்
கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ’’   (கலி.16)

எனவும்,

‘‘வளிதரு செல்வனை வாழ்த்தவு மியைவதோ’’    (கலி.16)

எனவும்      ஞாயிற்றைத்    தெய்வமாக்கி   அவனிற்   றோன்றிய
மழையினை  யுங்  காற்றினையும்  அத்தெய்வப்  பகுதியாக்கிக் கூறுப
வாலெனின், எல்லாத் தெய்வத்திற்கும் அந்தணர் அவி கொடுக்குங்கால்
அங்கி    ஆதித்தன்கட்    கொடுக்குமென்பது    வேதமுடிபாகலின்,
ஆதித்தன்  எல்லா  நிலத்திற்கும் பொது வென மறுக்க. இவ்வாசிரியர்
கருப்பொருளாகிய   தெய்வத்திணை   முதற்  பொருளொடு  கூட்டிக்
கூறியது   தெய்வழிபாட்டு   மரபிதுவே,  ஒழிந்தது  மரபன்றென்றற்கு.
எனவே, அவ்வந்நிலத்தின் தெய்வங்களே பாலைக்குந் தெய்வமாயின.

‘உறையுலகென்றார்,  ஆவும் எருமையும் யாடும் இன்புறு மாற்றான்
நிலைபெறும்   அக்காட்டின்   கடவுளென்றற்கு.  ‘மைவரை’  எனவே
மழைவளந்  தருவிக்கும் முருகவேளென்றார். இந்திரன் யாற்றுவளனும்
மழைவளனுந் தருமென்றற்குத் ‘தீம்புன’ லென்றார். திரைபொருது கரை
கரையாமல்  எக்கர்  செய்தல்  கடவுட்  கருத்தென்றற்குப் ‘பெருமண’
லென்றார்.

இனி, முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்