இஃது
எய்தியதன்மேற் சிறப்புவிதி; முற்கூறிய குறிஞ்சிக்கு முன்பனியும் உரித்தென்றலின்.
(இ-ள்)
பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப - பனி முற்பட்ட பருவமுங் குறிஞ்சிக்கு உரித்தென்று கூறுவர் ஆசிரியர் எ-று.
எதிர்தலென்பது முன்னாதல்; எனவே, முன்பனியாயிற்று, அது ஞாயிறுபட்ட அந்திக்கண் வருதலின். உரித்தென்றதனாற் கூதிர் பெற்ற யாமமும் முன்பனி பெற்று வரும் எனக் கொள்க.
உ-ம்:
பனியடூஉ நின்ற பானாட் கங்குல் தமியோர் மதுகை தூக்காய் தண்ணென முனிய அலைத்தி முரணில் காலை
(அகம்.125)
என முன்பனியாமங் குறிஞ்சிக்கண் வந்தது.
மருதத்திற்குரிய சிறுபொழுதும் நெய்தற்குரிய
சிறுபொழுதும்
|