இஃது
உரிப்பொருள் மயங்கு மென்றலின் மேலனவற்றிற்குப் புறனடை.
(இ-ள்)
திணை மயக்குறுதலும் கடிநிலை இலவே ‘மாயோன் மேய’ (5) என்பதனுள்
ஒரு நிலத்து ஓரொழுக்கம் நிகழுமென நினைத்துக் கூறிய ஒழுக்கம் அவ்வந்நிலத்திற்கே உரித்தா யொழுகாது தம்முள் மயங்கிவருதலும் நீக்கப்படா; நிலன் ஒருங்கு மயங்குதல் இன்று என மொழிப - அங்ஙனம் ஒருநிலத்து இரண்டொழுக்கந் தம்முள் மயங்குதலன்றி இரண்டு நிலம் ஒரோவொழுக்கத்தின்கண் மயங்குதல் இல்லை என்று கூறுவர்; புலன் நன்கு உணர்ந்த புலமையோர்- அங்ஙனம் நிலனும் ஒழுக்கமும் இயைபுபடுத்துச் செய்யும் புலனெறி வழக்கத்தினை. மெய் பெற உணர்ந்த அறிவினையுடையோர் எ-று.
என்றது,
ஒரு நிலத்தின்கண் இரண்டு உரிப்பொருள்
மயங்கி வருமென்பதூஉம், நிலன் இரண்டு மயங்காவெனவே காலம் இரண்டு தம்முள் மயங்குமென்பதுஉங் கூறினாராயிற்று. ஆகவே, ஒரு
|