யுயர்வரை யாடும் வைகறைப் புதலே ரணிந்த காண்பின் காலைத் தண்ணறும் படுநீர் மாந்திப் பதவருந்து வெண்புறக் குடைய திரிமருப் பிரலை வார்மண லொருசிறைப் பிடவவிழ் கொழுநிழற் காமர் துணையோ டமர்துயில் வதிய அரக்குநிற வுருவின் ஈயர் மூதாய் பரப்பி யவைபோற் பாஅய்ப் பலவுடன் நீர்வார் மருங்கி னீரணி திகழ இன்னும் வாரா ராயின் நன்னுதல் யாதுகொல் மற்றவர் நிலையே காதலர் கருவிக் காரிடி யிரீஇய பருவ மன்றவர் வருதுமென் றதுவே’’
(அகம்.139)
இது பிரிவிடையாற்றாது தோழிக்கு உரைத்தது.
இம் மணிமிடைபவளத்துப்
பாலைக்கண் முன்பனியும் வைகறையும் ஒருங்கு வந்தன.
‘‘தொல்லெழில் வரைத்தன்றி வயவுநோய் நலிதலி னல்லாந்தா ரலவுற வீன்றவள் கிடக்கைபோற் பல்பய முதலிய பசுமைதீ ரகன்ஞாலம் புல்லிய புனிறொரீஇப் புதுநல மேர்தர வளையவர் வண்டல்போல் வார்மணல் வடுக்கொள விளையவ ரைம்பால்போ லெக்கர்போழ்ந் தறல்வார மாவீன்ற தளிர்மிசை மாயவ டிதலைபோ லாயிதழ்ப் பன்மல ரையகொங் குறைத்தர மேதக விளவேனி லிறுத்தந்த பொழுதின்கண்;
இது தரவு.
சேயார்கட் சென்றவென் னெஞ்சினைச் சின்மொழி நீகூறும் வரைத்தன்றி நிறுப்பென்மன் னிறைநீவி வாய்விரியு பனியேற்ற விரவுப்பன் மலர்தீண்டி நோய்சேர்ந்த வைகலான் வாடைவந் தலைத்தரூஉம்;
போழ்துள்ளார் துறந்தார்கட் புரிவாடுங் கொள்கையைச் சூழ்பாங்கே சுடரிழாய் கரப்பென்மற் கைநீவி வீழ்கதிர் விடுத்தபூ விருந்துண்ணு மிருந்தும்பி யாழ்கொண்ட விமிழிசை யியன்மாலை யலைத்தரூஉம்;
தொடிநிலை நெகிழ்த்தார்
|