டிறத்தலுஞ் செல்லாய் பின்னின் றொழியச் சூழ்ந்தனை யாயிற் றவிராது செல்லினிச் சிறக்கநின் னுள்ளம் வல்லே மறவல் ஓம்புமதி எம்மே நறவின் சேயிதழ் அனைய வாகிக் குவளை மாயிதழ் புரையு மலிர்கொள் ஈரிமை உள்ளகங் கனல உள்ளுதோ றுலறிப் பழங்கண் கொண்ட கதழ்ந்துவீழ் அவிரறல் வெய்ய வுகுதர வெரீஇப் பையெனச் சில்வளை சொரிந்த மெல்லிறை முன்கைப் பூவீ கொடியிற் புல்லெனப் போகி யடர்செய் ஆயகல் சுடர்துணை யாக இயங்காது வதிந்தநங் காதலி யுயங்குசாய் சிறுபுற முயங்கிய பின்னே’’
(அகம்.19)
இது மறவலோம்புமதி யெனப் பிரிவு கூறிற்று.
‘‘அறியாய் வாழி தோழி யிருளற விசும்புடன் விளக்கும் விரைசெலல் திகிரிக் கடுங்கதி ரெறித்த விடுவாய் நிறைய நெடுங்கால் முருங்கை வெண்பூத் தாஅய் நீரற வறந்த நிரம்பா நீளிடை வள்ளெயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு கள்ளியங் காட்ட கடத்திடை உழிஞ்சில் உள்ளூன் வாடிய சுரிமூக்கு நொள்ளை பொரியரை புதைத்த புலம்புகொள் இயவின் விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோர் எழுத்துடை நடுகல் இன்னிழல் வதியும் அருஞ்சுரக் கவலை நீந்தி யென்றும் இல்லோர்க் கில்லென் றியைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் பொருளே காதலர் காதல் அருளே காதல ரென்றி நீயே’’
(அகம்.53)
இது பிரிதனிமித்தம். வற்புறுத்துந் தோழிக்குத் தலைவி கூறியது.
‘‘வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு பொன்செய் புனையிழை கட்டிய மகளிர் கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றைக் கானங் காரெனக் கூறினும் யானோ தேறேனவர் பொய்வழங் கலரே’’.
(குறுந்.21)
|