நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4921
Zoom In NormalZoom Out


ன்மை     நிகழ்தலிற்     பிரிவு    நிகழ்ந்தவாறாயிற்று.    ஆகவே
பாலைக்கண்ணே குறிஞ்சி நிகழ்ந்ததாயிற்று.

உ-ம்:

‘‘வேனிற் பாதிரிக் கூனி மாமலர்
நறைவாய் வாடல் நாறு நாட்சுரம்
அரியார் சிலம்பிற் சீறடி சிவப்ப
எம்மொ டொராறு படீஇயர் யாழநின்
பொம்ம லோதி பொதுள வாரி
அரும்பற மலர்ந்த வாய்பூ மராஅத்துச்
சுரும்புசூ ழலரி தைஇ வேய்ந்தநின்
தேம்பாய் கூந்தற் குறும்பல மொசிக்கும்
வண்டுகடிந் தோம்பல் தேற்றாய் அணிகொள
நுண்கோ லெல்வளை தெளிர்க்கும் முன்கை
மெல்லிறைப் பணைத்தோள் விளங்க வீசி
வல்லுவை மன்னால் நடையே கள்வர்
பகைமிகு கவலைச் சென்னெறி காண்மார்
மிசைமரஞ் சேர்த்திய கவைமுறி யாஅத்து
நாரரை மருங்கின் நீர்வரப் பொளித்துக்
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்குத் தீமூட் டாகுந்
துன்புறு தகுந ஆங்கண் புன்கோட்டு
அரிலிவர் புற்றத் தல்கிரை நசைஇ
வெள்ளரா மிளிர வாங்கும்
பிள்ளை யெண்கின் மலைவயி னானே’’      (அகம்.257)

இது     கொண்டு தலைக்கழிதற்கண் தலைவன் தலைவி நடையை
வியந்தது.   இஃது   அகம்.  ‘‘அழிவிலர் முயலும்’’ (நற்.9) என்பது
பாலைக்கட் புணர்ச்சி நிகழ்ந்தது.

இனித்     தலைவி    பிரிந்திருந்து    மிகவும்    இரங்குதலின்
‘இரங்கினு’மெனச் சூத்திரஞ்செய்து, அதனானே பாலைப் பொருட் கண்
இரங்கற் பொருள் நிகழுமென்றார்.

உ-ம்:

‘‘ஓங்குமலைச் சிலம்பிற் பிடவுடன் மலர்ந்த
வேங்கை வெறித்தழை வேறுவகுத் தன்ன
ஊன்பொதி யவிழாக் கோட்டுகிர்க் குருளை
மூன்றுட னீன்ற முடங்கர் நிழத்த
துறுகல் விடரளைப் பிணவுப்பசி கூர்ந்தெனப்
பொறிகிள ருழுவைப் பேழ்வா யேற்றை
யறுகோட் டுழைமான் ஆண்குர லோர்க்கும்
நெறிபடு கவலைய நிரம்பா நீளிடை
வெள்