இது
நிறுத்தமுறையானேயன்றி
அதிகாரப்பட்டமையின் உரிப்பொருள் கூறி ஒழிந்த கருப்பொருள் கூறுத னுதலிற்று.
(இ-ள்)
தெய்வம் உணாவே மா மரம் புள் பறைசெய்தி யாழின் பகுதியொடு தொகைஇ - எல்லாத் திணைக்குந்
தெய்வம் உணா விலங்கு மரம் புள் பறை தொழிலென்று இவற்றை யாழின் கூற்றோடே கூட்டி; அவ்வகை பிறவும் கருஎன மொழிப - அவைபோல்வன பிறவுங் கருவென்று கூறுவர் ஆசிரியர் எ-று.
யாழின்
பகுதி என்றதனான் மற்றையபோலாது பாலைக்குப் பாலை யாழென வேறு வருதல் கொள்க. ‘அவ்வகை பிறவும்’ என்றதனான் எடுத்தோதிய தெய்வம் ஒழிய அவற்று உட் பகுதியாகிய தெய்வமும் உள; அவை ‘மாயோன்மேன’ (5) என்புழிக் காட்டினாம். இதனானே பாலைக்குத் தெய்வமும் இன்றாயிற்று. இன்னும் ‘அவ்வகை’ என்றதனானே, பாலை
|