நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4932
Zoom In NormalZoom Out


ப்புந்
துறைநனி யிருந்த பாக்கமும் முறைநனி
யினிதும னளிதோ தானே துனிதுறந்
தகன்ற வல்கு லைதமை நுசுப்பின்
மீனெறி பரதவர் மடமகண்
மானேர் நோக்கங் காணா வூங்கே.            (நற்.101)

இது  வரைதற்  பொருட்டுத் தலைவி வேறுபாட்டிற்கு ஆற்றாத தோழி
சிறைப்புறமாகக் கூறியது.

‘‘அறிகரி பொய்த்த லான்றோர்க் கில்லைக்
குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே
யிதற்கிது மாண்ட தென்னா ததற்பட்
டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்ச
மயிற்க ணன்ன மாண்முடிப் பாவை
நுண்வலைப் பரதவர் மடமகள்
கண்வலைப் படூஉங் கான லானே.’’         (குறுந்.184)

இது கழறிய பாங்கற்குக் கூறியது.

‘‘கடுந்தே ரேறியுங் காலிற் சென்றும்....
என்நினை யுங்கொல் பரதவர் மகளே.’’       (நற்.349)

என வரும். இது நற்றிணை.

‘‘இவளே, கான  நண்ணிய’’  (45)  என்னும்  நற்றிணைப்  (45)
பாட்டினுட்   ‘‘கடுந்தேர்ச்   செல்வன்   காதன்  மகனே’’ என்று
அவனருமை  செய்தயர்த்தலின்   அவனை   இகழ்ச்சிக்   குறிப்பான்
அறிவித்துக்   கூறினாள்.   ஏனைப்  பெண்பெயர்க்கண்  வருவனவும்
வந்துழிக் காண்க. 

‘‘ஏனோர்  பாங்கினும்’’ எனப் பொதுப்படக்கூறிய
அதனான் மருத நிலத்து  மக்களுட்  டலைமக்கள் உளராகப் புலனெறி
வழக்கஞ் செய்த செய்யுள்கள் வந்தன உளவேற் கண்டுகொள்க.   (22)

அடியோரும் வினைவலரும் தலைமக்களாதற் குரியரெனல்
 

23. அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினுங்
கடிவரை யிலபுறத் தென்மனார் புலவர்.
 

இது     மேல்   நால்வகை  நிலத்து  மக்களுந்  தலைமக்களாகப்
பெறுவரென்றார்;   அவரேயன்றி இவருந் தலைமக்களாகுப, கைக்கிளை
பெருந்திணைக்க ணென்கின்றது.

(இ-ள்)     அடியோர்    பாங்கினும்.    பிறர்க்குக்   குற்றேவல்
செய்வோரிடத்தும்;  வினை வலர் பாங்கினும். பிறர் ஏவிய தொழிலைச்
செய்தல் வல்லோரிடத்தும்; கடி வரையில் புறத்து என்மனார் புலவர்.