நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   4933
Zoom In NormalZoom Out


தலைமிக்க புறத்து நின்ற கைக்கிளை பெருந்திணைகளுள் எ-று.

கூன்பாட்டினுள்,

‘‘நம்மு ணகுதற் றொடீஇயர் நம்முணா
முசாவுவங் கோனடி தொட்டேன்.’’

எனவும்,

‘‘பேயும் பேயுந் துள்ள லுறுமெனக்
கோயிலுட் கண்டோர் நகாமை வேண்டுவல்.’’   (கலி.94)

எனவும்       பெருந்திணைக்கண்   அடியோர்  தலைவராக வந்தது.
என்னை?   கோன்   அடிதொட்டேன்   என்றமையானும்   கோயில்
என்றமையானும் இவர்கள் குற்றேவன்மாக்கள் என்பது ஆயிற்று.

‘ஏஎயிஃதொத்தன்’ என்னும் குறிஞ்சிக்கலியுள்

‘‘போற்றாய் களைநின் முதுக்குறைமை போற்றிக்கேள்
வேட்டார்க் கினிதாயி னல்லது நீர்க்கினிதென்
றுண்பவோ நீருண் பவர்.’’                  (கலி.62)

தீயகாமம் இழிந்தோர்க்குரிமையின், இதுவும் அடியோர் தலைவராக
வந்த    கைக்கிளை.   அடியோரெனவே   இருபாற்றலை   மக்களும்
அடங்கிற்று.   ‘கடிவரையில’  என்றதனான்  அவருட்  பரத்தையரும்
உளரென்று கொள்க.

‘‘இகல்வேந்தன்’’ என்னும் முல்லைக்கலியுள்,

‘‘மேயு நிரைமுன்னர்க் கோலூன்றி நின்றாயோ
ராயனை யல்லை பிறவோ வமரருண்
ஞாயிற்றுப் புத்தேண் மகன்.’’               (கலி.108)

என்பதனாற்   றலைவன்   வினைவல   பாங்கனாயினவாறு  காண்க.
இதனுள்,

‘‘புனத்துளா னெந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ
வினத்துளா னென்னைக்குக் கலத்தொடு செல்வதோ
தினைக்காலுள் யாய்விட்ட கன்றுமேய்க் கிற்பதோ.’’ 
                                      (கலி.108)

என்றவழி     எமரேவலான்   யாஞ்   செய்வதன்றி  யாங்கள்  ஏவ
நின்னெஞ்சம் இத்தொழில்கள் செய்கின்றதில்லை என்றலின் வினைவல
பாங்கினாளாய தலைவி கூற்றாயிற்று.

‘‘யாரிவன்’’ என்னும் முல்லைக்கலியுள் (112),

‘‘வழங்காப் பொழுதுநீ கன்றுமேய்ப் பாய்போ