யின ணப்புலந் தட்டிலோளே யம்மா வரிவை யெமக்கே வருகதில் விருந்தே சிவப்பான்று சிறியமுள் ளெயிறு தோன்ற முறுவல் கொண்ட முகங்காண் கம்மே.’’
(நற்.120)
விருந்தொடு புக்கோன் கூற்று. செவிலிகூற்றுமாம்.
இந்நற்றிணை வாளை யீர்ந்தடிவகைஇ என்றலின் வேளாண்வருண மாயிற்று.
‘‘மலைமிசைக் குலைஇய உருகெழு திருவின் பணைமுழங் கெழிலி பௌவம் வாங்கித் தாழ்பெயற் பெருநீர் வலனேர்பு வளைஇ மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர இருநிலங் கவினிய வேமுறு காலை நெருப்பின் அன்ன சிறுகட் பன்றி அயிர்க்கண் படாஅர்த் துஞ்சுபுறம் புதைய நறுவீ முல்லை நாண்மலர் உதிரும் புறவடைந்திருந்த அருமுனை இயவின் சீறூ ரோளே ஒண்ணுதல் யாமே எரிபுரை பன்மலர் பிறழ வாங்கி அரிஞர் யாத்த வலங்குதலைப் பெருஞ்சூடு கள்ளார் களமர் களந்தொறும் மறுகும் தண்ணடை தழீஇய கொடிநுடங் காரெயில் அருந்திறை கொடுப்பவுங் கொள்ளான் சினஞ்சிறந்து வினைவயிற் பெயர்க்குந் தானைப் புனைதார் வேந்தன் பாசறை யேமே’’
(அகம்.84)
இது
தூதுகண்டு வருந்திக் கூறியது. இக் களிற்றியானை நிரையுள் தன்னூரும் ‘அருமுனை’யியவிற் சீறுார் என்றலிற்றான் குறுநில மன்னனென்பது பெற்றாம்.
‘‘அகலிருவிசும்பகம்’’ (214) என்னும் அகப்பாட்டும் பொருணோக்கினான் இதுவேயாமா றுணர்க.
‘‘இருபெரு வேந்தர் மாறுகொள் வியன்களத் தொருபடை கொண்டு வருபடை பெயர்க்குஞ் செல்வ முடையோர்க்கு நின்றன்று விறலெனப் பூக்கோள் ஏய தண்ணுமை விலக்கிச் செல்வே மாதல் அறியாள் முல்லை நேர்கால் முதுகொடி குழைப்ப நீர்சொரிந்து காலை வானத்துக் கடுங்குரற் கொண்மூ முழங்குதொறுங் கையற் றொடுங்கிநப் புலந்து பழ
|