இஃது உடன்போக்கினுள்
நற்றாயுந் தோழியுங் கண்டோருங்
கூறுவன கூறித் தலைவன் ஆண்டும்
பிறாண்டுங் கூறுங் கூற்றும்
கூறுகின்றது. ‘தமரினும் பருவத்துஞ் சுரத்து’
மென்னும் மூன்றற்கும்
ஒன்றா வென்பதனையும் ஒன்றிய வென்பதனையுங்
கூட்டி ஏழனுருபு
விரித்துப் பொருளுரைக்க.
(இ-ள்.)
ஒன்றாத் தமரினும் - உடன்போக்கிற்கு ஒன்றாத் தாயர் முதலியோர் கண்ணும்; பருவத்தும் - இற்செறிப்பாற் புறம்போகற்கு ஒன்றாமையானுந் தலைவனொடு கூட்டம்பெறாது ஆற்றியிருக்கும் பருவம் ஒன்றாததானும் ஒன்றாப் பருவத்தின்கண்ணும்;
சுரத்தும். அரிய சேய கல்லதர் ஆகலிற் போதற்கு ஒன்றாச் சுரத்தின்கண்ணும்; ஒன்றிய தோழியொடு வலிப்பினும் - தலைவி வேண்டியதே தான் வேண்டுதலிற் பின் தமர் கூறுங் கடுஞ்சொற் கேட்டற்கும் ஒருப்பட்டு நொதுமலர் வரவிற்காற்றாது உடன்போக்கிற்கேலாத
கடுங்கோடை யெனக் கருதாது கொண்டு தலைக்கழிதற்கு ஒன்றிய தோழியொடு தலைவன் ஆராய்ந்து உடன்போக்கினைத் துணியினும்; விடுப்பினும் - தலைவியை ஆற்றியிருப்பளெனக் கருதி
உடன்கொண்டு போகாது தலைவன் விடுப்பினும்;
இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக்
கடைக்கொண்டு பெயர்த்தலிற் கலங்கு அஞர்எய்திக் கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட அப்பால் பட்ட ஒரு திறத்தானும் - தந்தையுந் தன்னையரும் இடைச்சுரத்திடத்தே பின்சென்று பொருந்தித் தலைவியைப்
|