ன்றும் பாங்கோர் பாங்கினும் -
தனக்கு ஆக்கஞ் சிறந்த நட்புடையோராகித்
தோன்றும் நட்புடையோர்க்கு உற்றுழி
உதவச் சேறற்கண்ணும்;
இதற்கு ‘‘மலைமிசைக் குலைஇய’’ (அகம்.84)
என்பதூஉம் ‘‘இருபெரு வேந்தர்
மாறுகொள்’’ (அகம்.174) என்பதூஉம் முன்னர்க் காட்டினாம். (சூ.24.உரை)
அவற்றை உதாரணமாகக் கூறிக்கொள்க. மூன்றன் பகுதியும் - அறத்தினாற் பொருளாக்கி
அப்பொருளாற் காமநுகர்வலென்று பிரிதற்கண்ணும்; மண்டிலத்து அருமையும் - அங்ஙனம் பொருள் வருவாய்க்கு ஏதுவாகிய வேற்றுப் புலங்களின் அருமை கூறிப்
பிரிதற்கண்ணும்;
இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக்
காண்க.
தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் - தோற்றஞ் சான்ற புகழினராகிய வேற்று வேந்தர்தமது மீக்கூற்றங் கருதிப் பிரிதற்கண்ணும்;
இதற்குத் தலைவன்
கூற்று வந்துழிக் காண்க.
‘தோன்றல்
சான்ற’ என்றதனாற் றெவ்வர் தன்னின்
மிக்காரெனக் கேட்டுழி அழுக்காறு
தோன்றலின், அதுவும்
பிரிதற்கு ஏதுவாமென்றுணர்க. இஃது
அரசர்க்கே யுரித்து.
பாசறைப்
புலம்பலும் - தலைவன் பாசறைக்கண் இருந்து தனக்கு வெற்றி தோன்றிய காலத்துந் தான் அவட்குக் கூறிப் போந்த பருவம் வந்துழியுந் தூது கண்டுழியும் அவள் வருந்துவளென நினைத்துத் தனிமை கூறும்
இடத்தும்;
இதனைக் ‘கிழவி நிலையே’ (தொல். பொ. கற். 45) என்னுஞ் சூத்திரத்தான் விலக்குவரெனின், அதற்கு உம்மை விரித்துக் கிழவி நிலையை வினைசெய்யாநிற்றலாகிய இடத்து நினைந்து கூறினானாகக் கூறார்; வெற்றி நிகழுமிடத்துந் தான் குறித்த பருவம் வந்துழியுந் தூது கண்டுழியும் வருத்தம் விளங்கிக் கூற்றுத் தோன்றுமென்று பொருளாமென்றுணர்க.
முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற் வகையினும் -வகையின் வினைத்திறமுமென மாற்றுக. வேந்தன் எடுத்துக் கொண்ட வினை முடிந்த காலத்துத் தான் போக்கொருப்பட்டு நின்று பாகனொடு விரும்பிக் கூறிய வகையின்கட் டோன்றிய வேறொரு வினைத்திறத்திடத்தும்;
என்றது, அரசனுக்குப் பின்னும் ஒரு பகைமேற் சேறல்
உளதாதலை.
காவற்பாங்கின்
பக்கமும் - வேந்தன் றன்னாற் காக்கப்படுவனவாகிய பகுதிகளின்
கூற்றிற் பிரியுமிடத்தும்;
பகுதி ஆகுபெயர்;
அவையானை குதிரை முதலியவற்றைக் காத்தலும்,
அரசர்க்குத் தருமமாகிய வேட்டை
|