பெயர்த்தற் கன்னாய் கடிய மறவர் கதழ்ந்தார் - மடிநிரை மீளாது மீளார் விறல்வெய்யோர் யாதாங்கொல் வாளார் துடியர் வளம்’’
(புறத்திரட்டு.1245)
இவை கண்டோர் கூற்று.
பாக்கத்து
விரிச்சி - நிரைகோடற்கு எழுந்தோர் போந்து
விட்ட பாக்கத்துக் கங்குலின் நல்வாய்ப்புட் கேட்டலும், நிரை மீட்டற்கு எழுந்தோர் இடைப்புலத்துப் புறம்போந்தோர் கூறியவற்றை வாய்ப்புள்ளாகக்
கேட்டலும்;
உ-ம்:
‘‘திரைகவுள் வெள்வாய்த் திரிந்துவீழ் தாடி நரைமுதியோ னின்றுரைத்த நற்சொ -
னிரையன்றி
யெல்லைநீர் வைய மிறையோர்க் களிக்குமால் வல்லைநீர் சென்மின் வழி’’
(பெரும்பொருள்விளக்கம்.புறத்திரட்டு.1239)
‘‘வந்தநீர்
காண்மினென் றாபெயர்ப்போர் மாட்டிசைத்த
பைந்தொடியார் கூறும் பறவாப்பு - ளுய்ந்த’’
‘‘நிரையளவைத் தன்றியு நீர்சூழ் கிடக்கை வரையளவைத் தாவதா மண்’’
இவை விரிச்சியை வியந்தன.
புடைகெடப்
போகிய செலவே - நிரைகோடற்கு எழுந்தோர் ஆண்டுநின்று மீண்டுபோய்ப் பற்றார் புலத்து ஒற்றர் உணராமற் பிற்றை ஞான்று சேறலும், நிரைமீட்டற்கு எழுந்தோர் ஆண்டு ஒற்றப்படாமற் சேறலும்;
உ-ம்:
‘‘பிறர்புல மென்னார் தமர்புல மென்னார் விறல்வெய்யோ ராயிருட்கட் சென்றார் - நிரையுங் கடாஅஞ் செருக்குங் கடுங்களி யானைப் படாஅ முகம்படுத் தாங்கு’’ (பெரும்பொருள்விளக்கம்.
புறத்திரட்டு.1240.நிரைகோடல்.9)
‘‘கங்கை பரந்தாங்குக் கானப் பெருங்கவலை யெங்கு மறவ ரிரைத்தெழுந்தார்-தங்கிளைக்கண் மன்றுகாண் வேட்கை மடிசுரப்பவேதோன்றும் கன்றுகாண் மெய்குளிர்ப்பீர் கண்டு.’’
(புறத்திரட்டு.1246)
இவை கண்டோர் கூற்று.
புடைகெட ஒற்றின்
ஆசிய வேயே - நுரைகோடற்கு எழுந்தோர் பகைப்புலத்து ஒற்றர் உணராமற் சென்று ஒற்றி அவ்வொற்று வகையான் அவர் உணர்த்திய குறளைச் சொல்லும், நிரைமீட்டற்கு எழுந்தோர் அங்ஙனம் ஒற்றிய ஒற்றுவகையான் வந்து ஓதிய குறளைச் சொல்லும்;
உ-ம்:
‘‘ஒருவ ரொருவ ருணராமற் சென்றாங் கிருவரு மொப்ப விசைந்தார் - வெருவர வீக்குங் கழற்கால் விறல்வெய்யோர் வில்லோடு கோக்குஞ் சரந்தெரிந்து கொண்டு.’’
‘‘நெடுநிலை யாயத்து நிரைசுவ டொற்றிப் படுமணி
யாயம்
|