கொண்டு போதலும்;
உ-ம்:
‘‘புன்மேய்ந் தசைஇப் புணர்ந்துடன் செல்கென்னும் வின்மே லசைஇயகை வெல்கழலான் - றன்மேற் கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும் நெடுவரை நீழ னிரை.’’
(புற. வெ. வெட்சி.11) ‘‘கல்கெழுசீறூர்க் கடைகாண் விருப்பினான் மெல்ல நடவா விரையுநிரை - யொல்லெனத் தெள்ளறற் கான்யாற்றுத் தீநீர் பருகவு மள்ளர் நடவா வகை.’’
(பெரும்பொருள்விளக்கம். புறத்திரட்டு.1248.நிரைமீட்சி.6) இவை
கண்டோர் கூற்று. நுவலுழித்
தோற்றம்- பாடிவீட்டுள்ளோர் மகிழ்ந்துரைத்தற்குக்
காரணமான
நிரைகொண்டோர் வரவும், ஊரிலுள்ளோர்
கண்டு
மகிழந்துரைத்தற்குக் காரணமான
நிரைமீட்டோர் வரவும்; உ-ம்; ‘‘மொய்யண லானிரை முன்செல்லப் பின்செல்லு மையணற் காளை மகிழ்துடி - கையணல் வைத்த வெயிற்றியர் வாட்க ணிடனாட வுய்த்தன் றுவகை யொருங்கு.’’
(புறம். வெ. வெட்சி.12)‘‘காட்டகஞ் சென்றுயிர் போற்றான் கடுஞ்சுரையா மீட்ட மகனை வினவுறா - னோட்டந்து தன்னெதிர் தோன்றும் புனிற்றாத் தழீஇக்கலுழு மென்னெதிர்ப் பட்டாயோ வென்று.’’ (பெரும்பொருள்விளக்கம். புறத்திரட்டு.1249. நிரைமீட்சி.7) இது
கண்டோர் கூற்று. தந்து
நிரை - நிரைகொண்டோர் தாங்கொண்ட நிரையைத் தம் மூர்ப்புறத்துத்
தந்து நிறுத்தலும், நிரைமீட்டோர்தாம்
மீட்ட நிரையினைத் தந்து நிறுத்தலும்;உ-ம்;‘‘குளிறு குரன்முரசங் கொட்டின் வெரூஉங் களிறொடுதேர் காண்டலு மாற்றா - நளிமணி நல்லா னினநிரை நம்மூர்ப் புறங்கான மெல்லாம் பெறுக விடம்.’’‘‘கழுவொடு பாகர் கலங்காமல் யாத்துத் தொழுவிடை யாயந் தொகுமி - னெழுவொழித்தாற் போமே யிவையிவற்றைப்
|